tamilnadu

img

ஆணவக்கொலை வழக்குகளில் 90 விழுக்காட்டை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிறது

சென்னை, மார்ச் 11 - தமிழகத்தில் நடந்துள்ள ஆணவப் படுகொலை சம்பந்தமான 90 விழுக்காடு வழக்குகளை  தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் நடத்தி வரு கிறது என்று கே.சாமுவேல் ராஜ் தெரி வித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டக்குழுவும், தமுஎகச சைதை கிளையும் இணைந்து கலை இரவு  -2022  நிகழ்வை நடத்தின. இந்நிகழ் வில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டுக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம் வியாழனன்று (மார்ச் 10) சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘சாதி ஆணவப் படுகொலை: தீர்ப்புகளும் - தீர்வும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், “பிற்போக்கு சமூகத்தில் வெளிப்பாடாக ஆணவப் படுகொலை நடைபெறுகிறது. சாதி ஆணவப் படுகொலையை தடுக்க  சிறப்புச் சட்டம் கோரி 10 ஆண்டுக ளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் போராடி, சமூகத்தில் கருத்துருவாக்கம் செய்தன.

அதன் விளைவாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் இதற் கான வாக்குறுதியை கொடுத்துள்ளது” என்றார். “ஆற்றின் போக்கில் அரசியல் கட்சிகள் செயல்பட்டுக் கொண்டி ருக்கையில், எதிர்த்திசையில் இடது சாரி, முற்போக்கு இயக்கங்கள் செயல்படுகின்றன. சட்ட மன்றத்தில் ஆதிதிராவிடர் மானிய கோரிக்கை மீது அந்த சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களை பேசுவார்கள். இதற்கு மாறாக, இடதுசாரி கட்சிகளை சேர்ந்த முன்வரிசை தலைவர்கள் பேசு வார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா அமர்ந்திருக்கும்போது  மானியக் கோரி க்கையில் பேசிய சிபிஎம் தலைவர் கே.பாலபாரதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை யார் என்று மக்களுக்கு தெரியவில்லை. அமைச்சரவையில் முன்வரிசையில் அமர்ந்துள்ள அமைச்சர்களில் யாராவது ஒருவர் அந்த துறையை ஏற்று நடத்துவார்களா? என்று கேட்டார்.

அந்த அளவில்தான் துறையை வைத்திருக்கின்றனர். சொந்த  ஊழியர்கள் கூட இல்லாத துறையாக ஆதிதிராவிடர் நலத்துறையை உள்ளது.” என்றும் சாமுவேல்ராஜ் கூறி னார். கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை வழக்கில் அரசு ஒத்துழைப்பு வழங்காதது குறித்து வழக்கறிஞர் ப.பா.மோகன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி பேசிய அவர், “தமிழ கத்தில் சாதி ஆணவக்கொலை வழக்குக ளில் 90 விழுக்காட்டை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திக் கொண்டி ருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் சோர்ந்து கிடந்த படத்தை பார்த்து ஆதிக்க சமூகமே சோர்வடைந்துள்ளது. அந்த  நிலையை உருவாக்கவே போராடு கிறோம். முற்போக்கு பாதையில் சமூகம் பயணிக்கும் போதுதான் சாதி ஆணவக் கொலைகள் குறையும். அதற்கான பணியை தொடர்ந்து செய்வோம்” என்றார். இந்த நிகழ்வில் கலை இரவு ஒருங்கிணைப்பாளர் மு.சா. தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், தமு எகச மாநில செயற்குழு உறுப்பினர் சைதை ஜெ. முன்னணி மாவட்டத் தலை வர் ச.லெனின், செயலாளர் கே.மணி கண்டன், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் ம.சித்ரகலா, சிபிஎம் பகுதிச் செயலா ளர் ஜி.வெங்கடேசன், தமுஎகச மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்ணன், நிர்வாகிகள் எஸ்.ஆரி, டி.அன்பரசு, ஏ.சுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.