திருச்சியில் ஜோய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி
நடிகை யாஷிகா ஆனந்த் துவக்கி வைப்பு
திருச்சிராப்பள்ளி, மே 19- திருச்சி ஜோய் ஆலுக்காஸ் ஜுவல்லரியில் ஒளிரும் பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி, திருச்சியில் மே 17 இல் துவங்கியது. ஜோயாலுக்காஸின் நிர்வாக இயக்குனர் ஆண்டனி ஜோஸ் தலைமையும், ஜோயாலுக்காஸ் டஜிஎம் சில்லறை விற்பனை ராஜேஷ் கிருஷ்ணன், ஜோயாலுக்காஸ் டிஜிஎம் - மார்க்கெட்டிங் அனிஷ் வர்கீஸ் முன்னிலையும் வகித்தனர். நடிகை யாஷிகா ஆனந்த், பெரம்பலூர் மாவட்டம் உதவி ஆட்சியர் வைத்தியநாதன், ஜோயாலுக்காஸ் சென்னை மண்டல மேலாளர் லிஜோ ஜாய் ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது ஜோயாலுக்காஸின் நிர்வாக இயக்குநர் ஆம்டடனி ஜோஸ் கூறுகையில், இந்த ஆண்டின் சிறந்த வைர நகைகள் தந்திடும் அற்புத அனுபவமாக வாடிக்கையாளர்களுக்கு இது அமையும் என்பது உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இதில் மிகவும் அரிதான வைரங்கள், அன்கட் கலெக்ஷன்களின் அற்புதங்கள் மற்றும் பொக்கிஷமான நகைகளின் அழகிய தொகுப்பு இடம் பெறுகிறது. ஜோய்ஆலுக்காஸில் நடைபெறும் இந்த பிரபலமான வைர கண்காட்சிக்காக ஒவ்வொரு படைப்பும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு விசேஷமாக தொகுக்கப்பட்டுள்ளது என்றார். ஜோய் ஆலுக்காஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது, இந்த கண்காட்சியில் வாடிக்கையாளர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது. ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஒவ்வொரு வைர நகை பர்ச்சேஸ்க்கும் 1 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.