பாஜக தலைவர் எச். ராஜா மதுரை யில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத் தில், “அயோத்தியாக திருப்பரங் குன்றத்தை மாற்றுவோம்” என்று பேசியது அதன் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இது தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் மக்களை பிரிக் கும் ஒரு முயற்சியாகும். அதன் ஒரு பகுதிதான் “முருகன் மலையை காப்பாற்றும் போராட்டம்” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சா ரம். இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம் கூறியதுபோல், “2026 சட்டமன்ற தேர்த லில் முருகப்பெருமான் பாதிப்பை ஏற்படுத்துவார்” என்ற வாக்குறுதியும், மதத்தை அரசியலாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த இரண்டு செய்திகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு கருத்தைத் தெளிவாக்குகின்றன. பாஜகவின் நோக்கம் திருப்பரங்குன்றம் மலை யைப் பாதுகாப்பதல்ல, மாறாக தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து, தங்களது வாக்கு வங்கி அரசியலை வளர்ப்பதே ஆகும்
ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் சூழ்ச்சிகள்
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சங் பரிவாரங் கள், மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சிகளை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகின்றன. அயோத்தியில் ராமர் பெயரில் தொ டங்கப்பட்ட வெறுப்பு அரசியல், இன்று மாநிலங்க ளுக்கு ஏற்ப புதிய வடிவங்களில் உருவாகியுள் ளது. தமிழ்நாட்டில் முருகன், கேரளாவில் ஐயப்பன் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ் வொரு கடவுளின் பெயரில் வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சிகள், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை மத வெறியில் ஈடுபடுத்துவதற் கான ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளன. திருத் தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை, மத ரீதியான அரசியல் பாதயாத்திரைகள் மேற்கொள் ளப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இந்த முயற்சிகளுக்கு செவி சாய்க்கவில்லை என்பது கடந்த கால அனுபவம்.
வரலாறு மற்றும் மத ஒற்றுமை
திருப்பரங்குன்றம் மலை, தமிழ்நாட்டின் பழமைக்கும் மத ஒற்றுமைக்கும் சான்றாக நிற்கிறது. சங்க காலத்தில் இருந்தே முருக வழி பாடு இங்கு நடந்து வருகிறது. திருமுருகாற் றுப்படையில் நக்கீரர் குறிப்பிடும் படையல் முறைகள், தமிழ் மக்களின் மத ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன: “சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறிஅயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்...” இந்த வரிகள், முருகனுக்கு சிறுதினை அரிசி, ஆட்டு ரத்தம் போன்றவற்றை படையல் செய்யும் பழங்கால வழிபாட்டு முறைகளை விளக்குகின்றன. திருப்பரங்குன்றம் முருகன், சமணர், சிக்கந் தர் போன்ற பல்வேறு மதங்களின் வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. இது தமிழ்நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.
கலவர நோக்க பிரச்சாரம்
சங் பரிவாரங்கள், திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மலையைப் பாதுகாப்போம் என்ற பெயரில், மத வெறியை தூண்டும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் மக்களிடையே பிளவை உருவாக்குவதே இவர்களின் நோக்கம். டிசம்பர் 24 அன்று தர்கா வழிபாட்டுக்குச் சென்றவர்களை காவல்துறை கைது செய்தது, இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயல்பாடு கள், சங் பரிவாரங்களின் கலவர நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து சங் பரிவாரங்கள் மேற்கொள்ளும் கலவர நட வடிக்கைகள், தமிழ்நாட்டின் முற்போக்கு பாரம்பரி யத்திற்கு சவாலாக உள்ளன. ஆயினும் தமிழ்நாட்டு மக்கள், மத ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர். மக்கள் ஒற்றுமையே வெல்லும் தமிழ்நாட்டில் மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. திருப்பரங்குன்றம் மலையை மைய மாக வைத்து சங் பரிவாரங்கள் மேற்கொள்ளும் கலவர நடவடிக்கைகள், தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது. தமிழ்நாட்டின் முற்போக்கு பாரம்பரியம் மற்றும் மத ஒற்றுமை, இந்த சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. தமிழ்நாட்டு மக்கள், சங் பரிவாரங்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்பார்கள் என்பதே திருப்பரங்குன்றம் முன்வைக் கும் செய்தியாகும். எனவே சங் பரிவாரங்களின் வெறுப்பு அரசியல், இந்த ஒற்றுமையை சிதைக்க முடியாது. தமிழ்நாட்டின் மக்கள் ஒற்றுமையே இந்த சவால்களை முறியடிக்கும்.