tamilnadu

img

இந்தியாவில் கிரிக்கெட்டிற்குத் தான் முக்கியத்துவமா? மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி....

மதுரை:
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படு கிறது. அது மட்டும்தான் விளை யாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர். இது தவறான நடைமுறையாகும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரி வித்துள்ளனர்.

மதுரை துவரிமானை சேர்ந்த மதுரேசன், சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தி யாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவில் பதக்கங்கள் பெறுகின்றனர்.ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ. 30 லட்சம் முதல்ரூ. 75 லட்சம் வரை விருது மற்றும்பரிசுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசு ரூ.50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வழங்குகிறது. அனைத்துவிதமான வீரர்களை யும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை.வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. சட்டப்படிஅனைத்து விதமான விளை யாட்டு வீரர்களையும் சமமாக நடத்த வேண்டும். ஹரியானா மாநிலஅரசு சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களை அங்கீகரித் துள்ளது. 

வேலை வாய்ப்பு, ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. அது போல் தமிழகத்திலும், சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு வெள்ளியன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன்விசாரணைக்கு வந்தது. கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்து வம் தரப்படுகிறது. அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தி யுள்ளனர். இது தவறான நடைமுறை யாகும். மனிதனின் ஆரோக்கி யத்தை காத்திடும் பல வகையானவிளையாட்டுகள் இந்தியாவில் உள்ளன. கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பலவிளையாட்டுகள் சிறப்பா னவை. அனைத்து விளை யாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும்.பிற விளையாட்டுகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். அனைத்து வகையான விளையாட்டு வீரர்க ளுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்’’ எனக் கூறி, மனுக்கள் மீதான விசாரணையை அக். 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.