tamilnadu

img

Joy (மகிழ்ச்சி) - ஆர்.மைதிலி

உலகம் முழுவதும் “ hello” எப்படி பொதுவான வார்த்தையோ, அது போல சாதி, மதம், இனம், மொழி மற்றும் நாடுகள் கடந்து பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் உள்ளது.வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின் தாங்கிய நாடுகள் என அந்தந்த நாடுகளில் உள்ள சூழலுக்கு ஏற்ப அதற்குரிய தன்மையோடு பெண்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பொது இடங்களில் முதல் கேள்வி எத்  தனை குழந்தைகள் என்பது தான். இன்றும்  குழந்தை இல்லாதவர்கள் சுப காரியங்களில் முன்னின்று எதுவும் செய்யக் கூடாது என்ற  நிலை உள்ளது. இதனால் கடும் மன உளைச்ச லுக்கு ஆளாகுகிறார்கள் தம்பதியர்கள். அதில் ஒன்று குழந்தையின்மை பிரச்சனை. அதற்கு தீர்வு கண்ட, மருத்துவ அறிவியல் வளர்ச்சி, அதற்காக உழைத்த மருத்துவ விஞ்ஞானிகளுக்கு ஏற்படும் பல்வேறு தடைகள், குறிப்பாக மதவாதிகளால், சமூ கத்தில் புரையோடி போயிருக்கிற மூட பழக்க வழக்கங்கள். அதை கடந்து அவர்கள் பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு கண்டுபிடிக்கும் சோதனைக் குழாய் குழந்தை (test tube baby) மருத்துவம்.

இயற்கையில் உள்ள அனைத்தும், குறிப்பாய் உயிரினங்கள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுகின்றன.ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுமே முதலில் பெரும்பாலும் எலிகளுக்கு தான் செய்யப்படுகிறது. இதுவும் முதலில் எலிகளுக்கு தான் செய்யப்படுகிறது.  இன்று நாம் அனுபவிக்கிற குறிப்பாய் பெண்களுக்கு எதுவும் சுலபமாய் நம் கை களுக்கு வரவில்லை மருத்துவம் உட்பட. அதிலும் குறிப்பாய் குழந்தை பேறு. உலகம் முழுவதுமே குழந்தையின்மை பிரச்சனை காரணமாக இச்சமூகத்தால் அதி கம் பாதிக்கப்படுவது, அவமானப்படுத்தப்படு வது ஆண்களை காட்டிலும் பெண்களே . செயற்கை கருவூட்டல் (IVF) மருத்துவ முறை என்பது திருமணமாகி பல ஆண்டு களாகியும் குழந்தையில்லாதவர்கள் தாய்மை  அடைவதற்கான ஒரு மருத்துவ முறை. பெண்ணின் கருப்பையில் இருந்து முட்டைகளை எடுத்து ஆணின் விந்தணு வுடன் ஆய்வகத்தில் வைத்து கருவுறச் செய்து  பெண்ணின் கர்ப்பப்பையில் வைக்கப்படு கிறது. இந்தியாவில் திருமணமானவர்களில் 10 - 14 % பேர் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது. இப்படத்தில் மருத்துவ ஆராய்ச்சியில் உதவும் பெண் ஜேன் (jean) மிக எதார்த்தமாக நடித்திருப்பார். இதர பெண்களின் உணர்வு களை அப்படியே உள்வாங்குவதும், அவர் களின் இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக கடும்  முயற்சி எடுப்பதும், படத்தின் இறுதியில்  இவர்கள் ஆராய்ச்சி வெற்றி பெற்று குழந்தை யை பார்க்கும் போது அழுவதும், நம்மையும் அழ வைக்கும்.

அப் பெண்ணின் தாயார் இந்த ஆராய்ச்சி யில் ஈடுபடக்கூடாது என்று கண்டிப்பார். அவர்கள் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த வர்கள் .இச்செயல் கடவுளுக்கு எதிரானது என்று அவர் தாயார் கருதுவார். ஆனால் ஜீன் குழந்தையின்மை பிரச்ச னையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ  வேண்டும் என்பதுதான் ஜன் குறிக்கோளாக இருக்கும். அதற்காக அவருடைய தாயாரை யும் பிரிந்து வாழ்வார். உண்மையில் இம்மருத்துவ ஆராய்ச்சி யில் வெற்றி பெற்ற மருத்துவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கல்வெட்டொன்றும் அவர்கள் பெயரில் அமைக்கப்பட்டது. அதில் ஆராய்ச்சியில் உதவிய பெண்ணின் பெயர் இடம் பெறாது. ஆனால் மருத்துவர்கள் அவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற போராட்டத்தை நடத்திய பின்பு அவர் பெயரும் இணைக்கப் பட்டது. சிறப்பான நடிப்பை அனைவரும் வழங்கி யுள்ளனர். மருத்துவ விஞ்ஞானிகளின் கடும்  உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது. அவர்களின் குடும்பத்தில், சமூகத்தால் ஏற்படும் பிரச்சனைகள் நம்மை சிந்திக்க வைக்கிறது. இசைக்கு எப்படி மொழி தேவை இல்லையோ ,அது போல இப்படம் புரிய, படத்தின் காட்சி அமைப்பு போதுமானது. நல்ல  இசையமைப்பு. 

ஏராளமான தடைகள், பல முறை தோல்வி கள், ஒரு கட்டத்தில் இம்முயற்சியை கைவிடு கிறார்கள். குழுவில் பணிபுரியும் பெண் தான் மீண்டும் ஆராய்ச்சி தொடர முயற்சிக்கிறார். இறுதியில் அவர்களின் முயற்சி வெற்றி பெறு கிறது. பெண் குழந்தை பிறக்கிறது.  ( 1969 - 1978 வரை 282 பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 5 பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள். வெற்றி கரமாக அதில் இருவருக்கு குழந்தைகள் பிறக்கின்றன. பிறகு இன்று உலகம் முழு வதும் 12 மில்லியனுக்கும்( ஒரு கோடி 20 லட்சத்திற்கும்)அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளார்கள்) இயக்குநர் பெண் டெய்லர் உண்மையில் பாராட்டுக்குரியவர். வலிகளுக்கு பின்னால் கிடைக்கும் “மகிழ்ச்சி”க்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இதற்கு மேல். இதில் செவிலியர் ஜீன் (jean) ஆகதொம சின் மெகன்சியும், மருத்துவர் எட்வராக ஜேம்ஸ் நார்டனும், பாப் (BOB ) முதன்மை ஆய்வு மருத்துவராக பில் நைகியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.