tamilnadu

img

குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசும் ஆளுநர் ரவி மீது வழக்கு பதிந்திடுக!

நாகர்கோவில், ஜுன் 25-  குழந்தை திருமணத்தை ஆதரித்துப்  பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வலி யுறுத்தினார்.  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை யில் ஞாயிறன்று (ஜுன் 25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பெண் உரிமை மாநாட்டில் பங்கேற்க வருகை  தந்த கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களி டம் மேலும் கூறியதாவது:  சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் ஆணாதிக்கத்தின் அடக்கு முறைக்கு தொடர்ச்சியாக உள்ளாக்கப் படுகிறார்கள். பெண்கள், குழந்தைகள்  மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அனைத்து விசயங்களிலும் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்கிற கோட்பாடு அமலாக்கப்படுகிறது. ஆண் -பெண் சமத்துவமாக இருக்க வேண்டும் என்கிற நிலை அறவே இல்  லாததாக இந்திய சமூகம் நீடிக்கிறது. எனவே, ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண் உரிமை மாநாட்டை இன்று (ஜுன் 25) தக்கலை யில் நடத்துகிறது. 

 குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல்  நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பாஜக அரசு கடைப்பிடிக்கும் உலக மய, தாராளமய கொள்கைகளின் விளைவாக பெண்களுக்கான அனைத்து வகை வேலை வாய்ப்புகளும் மறுக் கப்படுகின்றன. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தால் 90 சதவிகி தம் வரை பெண்கள் பயனடைந்து வரு கிறார்கள். இதில்கூட மோடி அரசு  அதற்கான ஒதுக்கீட்டை படிப்படியாக  குறைத்து, 100 நாள் வேலை நாட்களை சராசரியாக 15 நாட்களாக குறைத்துள் ளது. இத்திட்டத்தில் சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் சம்பள பாக்கியாக வைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறம் துவங்கி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.  நேற்று (ஜுன் 24) சென்னை நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்புக்  குரியது. ஆண் தனது சேமிப்பில் இருந்து ஒரு சொத்து வாங்கினாலும் அதில் சரிபாதி உரிமை அவரது மனை விக்கு உண்டு என தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பெண்ணின்  ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு கணவ னால் சொத்து வாங்கியிருக்க முடியாது  என்கிற விளக்கத்துடன் வந்துள்ளது  இந்த புதிய தீர்ப்பு. ஆனால் இந்தியா வில் உள்ள பல நீதிமன்றங்கள் அப்படி இல்லை. அரசமைப்பு சாசனத்தின்படி தீர்ப்புகள் வழங்குவதற்கு பதிலாக மனுஸ்மிருதி அடிப்படையில் நீதி வழங்கும் போக்கை அடிக்கடி பார்க்க முடிகிறது. 

உதாரணமாக அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை குறிப்பி டலாம், காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கும் காதலன் அந்த பெண்  ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாக  கூறியபோது, நீதிபதி அந்த பெண்ணின் ஜாதகத்தை பல்கலைக்கழகத்தின் ஜோதிடவியல் துறைக்கு அனுப்பி சரி பார்க்கும் போக்கும் உள்ளது. புதுச்சேரி  ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சுந்த ரகாண்டம் படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என சொல்லும் அளவுக்கு நிலைமை மோசாகி உள்ளது. தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட குழந்தை திரு மணத்தை ஆதரித்து பேசுகிறார். சிதம் பரம் தீட்சிதர் மீது குழந்தை திருமண வழக்கு பதிவு செய்ததை விமர்சித்து சனாதனத்துக்கு ஆதரவாக பேசியவர், அவரே குழந்தை திருமணம் செய்து கொண்டதாக வாக்கு மூலம் அளிக்கி றார். இதில் ஏன் அவருக்கு எதிராக  வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கூடாது? மனுநீதி அடிப்படையி லான ஒரு அரசமைப்பு சாசனத்தை நிறை வேற்றுவதற்கான முயற்சி வேகமாக நடைபெறுகிறது என்பதையே இவை காட்டுகிறன்றன. அத்தகையான ஆபத்  தான முயற்சிகளுக்கு இடமளித்து விடக்  கூடாது என்கிற அடிப்படையில்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாத பாஜக அரசு

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளு மன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு  செய்வதற்கான மசோதா கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சி யில் அதை நிறைவேற்றி இருக்க  வேண்டும். பெண்களை அதிகாரமயப் படுத்துவதற்கு எதிரான சனாதன  கொள்கையை கொண்டுள்ள கட்சி என்ப தால் அந்த மசோதாவை கிடப்பில் போட்  டுள்ளனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சத விகித இட ஒதுக்கீடு என்கிற வரவேற்கத்  தக்க நடைமுறை உள்ளது. ஆனால், இதில் 90 சதவிகித இடங்களில் ஆண்கள்  தான் அதிகாரம் செலுத்தும் நிலை உள்ளது. சட்டப்படி பெண்களுக்கு அதி காரம் அளித்தாலும் சமூக அடிப்படை யில் ஆண்களின் ஆதிக்கம் நீடிக்கி றது.  வீடுதான் பாதுகாப்பான இடம் என  பெண்களால் கருதமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப வன் முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2019-20 இல் அதிக குடும்ப வன்முறைகள நடந்த மாநிலங்களில் 2 ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.  மனைவியை கணவன் அடிப்பது சாதா ரண நிகழ்வாக உள்ளது. ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து பெண் உரிமைக் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பெண்  கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதில்  சிபிஎம் தலையிடுகிறது. அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் செயல்படு கிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் பெண்களின் உரிமை களுக்காக குரல்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  பேட்டியின்போது கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில  செயற்குழு உறுப்பினர்கள் க.கனக ராஜ், எஸ்.நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். அந்தோணி, நகரச் செயலாளர் மோகன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.