2024 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தொடும் என கோல்ட் மேன் சாச்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பு கணித்திருந் தது. இந்தியா போன்று பெரிய இறக்குமதி யாளராக வளர்ந்து வரும் பொருளாதா ரங்களுக்கு இந்த முன்னறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதிர்ஷ்ட வசமாக அவர்களின் குறி தப்பியது. கச்சா எண்ணெய் விலை தற்போது 70 லிருந்து 72 டாலராக இருப்பதால் கடந்த ஆண்டில் எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் குறைந்தது. ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல்- ஹமாஸ் போர் முடிவிற்கு வரும் சிறு அறிகுறிகளால் ஒரு மோசமான புவி அரசியல் சூழலுக்கு நடுவிலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் வினியோகம் சீர்குலையவில்லை
உலகில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா இருந்தும் விநியோகம் சீர்குலைய வாய்ப் பில்லை என சந்தைகள் உணர்கின்றன. மேற்கத்திய நாடுகளால் தடைகள் விதிக்கப்பட்ட போதும் அதிகமாக நுகரும் நாடுகளுக்கு அதன் ஏற்றுமதிகள் இன் னும் தடைப்படவில்லை. போலந்து, பின்லாந்து, ஹங்கேரி மற்றும் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா விடமிருந்து எண்ணெய் மற்றும் பெட் ரோலியப் பொருட்கள் வாங்குவதை தொடர்கின்றன. (வாங்கும் அளவு சிறிது குறைந்து இருக்கலாம்) கூடுத லாக ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்தி இந்தியாவில் சுத்திகரிப்பு நிலையி லிருந்து பெட்ரோல், டீசலை கணிசமான அளவில் கொள்முதல் செய்துகொள்கிறது.
மேற்காசிய பதற்றத்தின் தாக்கம்
மேற்காசிய மோதலை பொறுத்த வரை ஏமனை தளமாகக் கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழி யாக நடைபெறும் சர்வதேச வர்த்தகம் சீர்குலைந்து வருகிறது.இந்தப் பாதை யைக் கடப்பது வணிகக் கப்பல்களை பெரிதும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறது. நன்னம்பிக்கை முனை வழியாகச் சுற்றி வருவதால் செலவு அதிகமாகின்றது. ஆனாலும் இந்த பகுதியிலிருந்து வரும் கச்சா மற்றும் எரிவாயு விநியோகத்தை பாதிக்கவில்லை. மேலும் கடல் மற்றும் தரை வழியாக நுகர்வோரை அது தொடர்ந்து சென்றடைகிறது. கடந்த ஆண்டு எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்திற்கு வழி வகுத்த கார ணங்களில் இதுவே முதன்மையானது.
மந்த நிலையிலிருந்து மீளும் சீனா
உலகின் மிகப்பெரிய இறக்குமதி யாளர் சீனா. அதன் தேவைகளில் இன்று ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வ தேச அளவில் அதன் உற்பத்தித் துறை சுருங்கி வருவதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மந்தத்திலிருந்து மீண்டு அதன் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா 2023இல் 5.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. ஆனால் 2024இல் 8 சதவீதம் தான் எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது.பொருளாதார வளர்ச்சி குறைவது எண்ணெய் இறக்குமதியையும் பாதித்துள்ளது.
அமெரிக்க உற்பத்தி அதிகரிப்பு
உலகின் மிகப்பெரிய கச்சா உற்பத்தி யாளரான அமெரிக்காவில் உற்பத்தி அதிகரிப்பது விலை குறைவதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். உண்மையில் எண்ணெய் ஏற்றுமதி ஒபெக் (OPEC) அமைப்புக்கு வெளியே உள்ள நாடுகளில் இந்த ஆண்டு எண் ணெய் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனாலும் சந்தைகளின் மந்த நிலை தொடர்வதால், எந்த ஒரு நாடுமே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் மனநிலையில் இல்லை என்றும் தெரிகிறது. இதனால் கூட கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயராமல் நிற்கிறது. தற்போது அது சரியவும் தொடங்கியுள்ளது.
இந்தியாவிற்கு சாதகமான நிலை
எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் 85 சதவீதத்திற்கும் அதிக மான எரிபொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இந்தியா விற்கு மிகவும் சாதகமானது. பிப்ரவரி 2022இல் உக்ரைன் - ரஷ்ய போர் துவங்கியதிலிருந்து விலைகள் நிலை யற்றதாகவே நீடிக்கின்றன. ஆனாலும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா தள்ளுபடி விலையில் பெற முடிந்தது.அதிக விலையேற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கவும் இது உதவியது. சமீபத்தில் ஏற்பட்ட சரிவால் இந்தியாவில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 89 டாலரில் இருந்து 72 ஆக ஏப்ரல் மாதத்தில் குறைந்தது. ஒரு தோராய மதிப்பீட்டில் இந்த செலவின் தாக்கத்தை இப்படி புரிந்து கொள்ளலாம்: ஒவ்வொரு 10 டாலர் விலை உயர்வும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை( Current Account Deficit) 0.5 சதவீதம் அதிகரிக்கும். மாறாக, 10 டாலர் குறைகிறது என்றால் நம்முடைய நடப்புக் கணக்கின் பற்றாக்குறையும் குறையும். பொரு ளாதாரத்திற்கு அது நன்மை பயக்கும். பொதுவாக உலகளாவிய விலைகள் உயரும் பொழுது எண்ணெய் பொருட் களின் விலை உயர்த்தப்படுகிறது. ஆனால் விலைகள் குறையும் பொழுது அரிதாகவே இங்கே குறைக்கப்படுகிறது.
மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியும்
இந்த சாதகமான சூழலில் சாமானி யர்களுக்கு சிறிது நிவாரணமும் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பொருட்கள் விலையை ஒன்றிய அரசு குறைக்க முடியும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் பல மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள சூழலில் இது ஒரு நடைமுறை அரசியல் உத்தியாக மாறும்.2024 பொது தேர்தலுக்கு முன்னதாக மார்ச் மாதத்தில் இதே போன்ற நடவடிக்கையை ஆட்சியாளர்கள் எடுத்தனர் என்பதை மறக்கக்கூடாது.
லாபத்தை நோக்கி எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச விலைகள் ஏறும் பொழுதும் மற்றும் சில்லரை விலைகள் நிலையாக இருக்கும் பொழுதும் எண்ணெய் சந்தைப்படுத்தும் ஐஒசி, எச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்களிடமிருந்து விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்பும் வருகிறது.ஆனால் 2023-24 நிதி ஆண்டில் அவர்களுக்கு 81 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளதால் தற் போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி வீழ்ச்சியிலிருந்தும் விலை சரிவிலிருந்தும் மீண்டும் வெளியேறி உலகச் சந்தைகள் உறுதி அடையும் என்று எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்து நிற்கின்றன.ஆனாலும் இதற்கான உடனடியான சாத்தியக்கூறு இருப்பதாக தெரியவில்லை. சீனப் பொருளாதாரமும் மந்த நிலையில் இருந்து மீளும் வரையில் எண்ணெய் தேவை அதிகரிக்காது. அதே நேரத்தில் ஒபெக் உறுப்பினர் அல்லாத உற்பத்தியாளரிடமிருந்தும் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
முதலீட்டு வங்கிகளின் கணிப்பு
இதன் விளைவாக உலகளாவிய முதலீட்டு வங்கிகள் தங்கள் விலை கணிப்புகளை விரைவாக திருத்தி வருகின்றன. மோர்கன் ஸ்டான்லி 2024 இறுதியில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 75 டாலர் வரும் என்றும் கோல்ட்மேன் சாச்ஸ் 70-லிருந்து 80 டாலர் வரை சரியும் என்றும் சிட்டி குரூப் 60 டாலர் வரையும் கூட வீழ்ச்சி அடையும் என கணித்துள்ளன. அதாவது எண்ணெய் சந்தைகளில் விரைவில் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. மிதமான நிலையே தொடரும் எனவும் எதிர்பார்க்கலாம். மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்தால் விலைகள் உயரலாம். இந்த நிலையில் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் சில்லரை விற்பனையில் விலையை குறைக்க முடியும். புவிசார் அரசியல் சூழலும் அதற்கு தக்கபடி உள்ளது.எனவே,மோடி அரசாங்கம் பெட்ரோல் டீசல் விலையை உடனே குறைக்க முன் வர வேண்டும்.
நன்றி : தி டிரிப்யூன் (12/9/24).
தமிழில்: கடலூர் சுகுமாரன்.