tamilnadu

img

மகளிர் உரிமைத் தொகை; விரைவில் குறைகள் நீங்கும்!

இராஜபாளையம், நவ. 14 - குறைபாடுகள் சரி செய்யப்பட்டு அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பி னர் தங்கபாண்டியன் இல்ல சுயமரியாதைத் திருமண விழாவில் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார். அப்போது, அவர் பேசுகையில், “இந்தியாவில் முதன்முறையாக மகளிருக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்று கொண்டு வந்தவர் கலைஞர். இந்தியாவில் முதல்முறையாக, 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டி ருக்கிறார். அது மட்டுமல்ல, மகளிருக்கு கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டி ருக்கின்றார். அதில் சில குறைபாடுகள் இருக்கிறது. விரைவில் அது சரி  செய்யப்பட்டு அனைத்து தகுதியான மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயன் வழங்கப்பட உள்ளது. இதனை மக்களி டம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், “சுயமரியாதைத் திருமண தம்பதிக்கு பிறக்கும் குழந்தை  ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழில் பெயர் வைக்க வேண்டும்’’ என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.