tamilnadu

ஜிஎஸ்டி எனும் வரி பயங்கரவாதத்திலிருந்து சிறு, குறு, நடுத்தர வணிகத்தை காப்பாற்றுங்கள்!

மதுரை, பிப். 21 சிறு, குறு, நடுத்தர தொழில்களை கடுமையாக பாதித்துள்ள ஜிஎஸ்டி எனும் வரி பயங்கரவாதத்திலிருந்து தமிழக சிறு, குறு, நடுத்தர வணிகத் துறையினரை பாதுகாக்கும் விதத்தில் தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற் கான பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளி யிடப்பட வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் தமிழக நிதி அமைச்சர் டாக்டர் பழனி வேல் தியாகராஜன், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரி டம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கூறியிருக்கும் அம்சம் வருமாறு: ஜிஎஸ்டி வரி முறையின் அம லாக்கம் மிகக் குழப்பமாக உள்ளது. தினமும் பல திருத்தங்களும், விளக்கங் களும் கொடுத்து அவற்றை முன்தேதி யிட்டு அமலாக்குவதால் தொழில் வணி கத்துறையினர், குறிப்பாக சிறு, குறு,

 நடுத்தர தொழில் வணிகத்துறையினர் ஜிஎஸ்டி வரிச் சட்டத்தை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்ற னர். வரி பயங்கரவாதம் கட்டவிழ்த்தப் பட்டுள்ளது.  இவ்வரிச்சட்டத்தை கடைப்பிடிப்ப தற்கு கூடுதல் செலவு ஏற்படுவதாலும், அறியாமல் புரியாமல் செய்யும் தவறு களுக்கு கூட மிக அதிகமாக அபராதம்,  வட்டி செலுத்த நேரிடும் என்ற அச்சத்தாலும், சிறு தொழில் வணிகத் துறையினர் தங்களது வணிகத்தையே நிறுத்திவிட துவங்கியுள்ளனர். இது மாநில பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். எனவே தமிழக அரசு,

ஜிஎஸ்டி அமலாக்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை குறைப்பது, எந்த நாட்டிலும் இல்லாத 28 சதவீத வரி விகிதத்தை ரத்து செய்ய  பரிந்துரை செய்வது, வணிகச் சின்னம்  கொண்ட அத்தியாவசிய உணவு தயாரிப்புகளுக்கும் வரி விலக்கு அளிப்பது, ஹெச்எஸ்என் கோடு எனும்  தொகுப்பில் உள்ள 21 பிரிவுகளுக்கும் அந்த அடிப்படையில் மட்டுமே வரி விதிப்பது, சேவை வரி வரம்பை உயர்த்துவது, அனைத்து வகை மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மற்றும் கவுன்சிலிடம் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.