‘இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா?’
ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி
மதுரை, மே 5 - நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு, அனைத்துத் துறைகளிலும் இந்தித் திணிப்பை தீவிரமாக்கி யுள்ளது. ஒன்றிய அரசின் திட்டப் பெயர்கள் அனைத்தையும் இந்திக்கு மாற்றியதுடன், ஒன்றிய அரசின் அலுவல கங்களிலும், அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கி லத்துக்கு பதில் இந்தியை திணித்து வருகிறது. மும்மொழிக் கொள்கை மூலம், இந்தி பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இந்தியைத் திணிக்க பார்க்கிறது. மேலும், ‘மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் கல்விக்கான நிதியை தரமுடியாது’ என மிரட்டி வருகிறது. அண்மையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான சென்னை மண்டல வானிலை மையம் வழங்கும் வானிலை முன்னறிவிப்பிலும், வலுக்கட்டாயமாக இந்தியைத் திணித்தது. இதன் அடுத்ததாக, இந்திய ரயில்வே பயணக் கட்டுரைக்கான போட்டியிலும் ஒன்றிய அரசு இந்தியைத் திணித்துள்ளது. இந்திய ரயில்வே துறை பயணி களுக்கான ஒரு கட்டுரைப் போட்டியை நடத்துகிறது. இதற் கான அறிவிப்பையும் வெளி யிட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது ரயில் பயண அனு பவத்தை ’இந்தி’ மொழியில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளது. பாஜக அரசின் இத்தகைய இந்தித் திணிப்பு அறிவிப்புக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடே சன், தமது சமூகவலைதளப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். ”இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை. இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவு கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே. இரயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று” என சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.