tamilnadu

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக எம்விஏ கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டத் தொடர் துவக்கம்

மும்பை 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ் டிராவில் ஒரே கட்ட மாக (நவம்பர் 20 அன்று) சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதி களில் போட்டியிடுகிறது. பால்கர் மாவட்டத்தின் தஹானு (பழங்குடி), நாசிக் மாவட்டத்தின் கல்வான் (பழங்குடி) ஆகிய 2 தொகுதிக ளில் மகா விகாஸ் அகாதி கூட்ட ணியுடன் இணைந்து போட்டியிடு கிறது. தஹானுவில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், தற்போதைய எம்எல்ஏ வினோத் நிகோல் போட்டியிடுகிறார். கல்வான் தொகு தியில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பி னரும், 7 முறை எம்எல்ஏவுமான ஜே.பி.காவிட் வேட்பாளராக கள மிறங்கியுள்ளார். மூன்றாவதாக சோலாப்பூர் சிட்டி மத்திய தொகுதி யில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி களுக்கு எதிராக கட்சியின் முன் னாள் மத்தியக் குழு உறுப்பினரும், 3 முறை எம்எல்ஏவாகவும் இருந்த நரசய்யா ஆதம் சிபிஎம் சார்பில் போட்டியிடுகிறார்.

தஹானு சிபிஎம் கோட்டை

தஹானு (பழங்குடி) தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையாகும். தஹானு பகுதி  1945 முதல் 1948 வரை புகழ்பெற்ற வார்லி ஆதிவாசி கிளர்ச்சியின் மையமாக இருந்தது. இந்த ஆதிவாசி கிளர்ச்சி மையம் அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி யின் பழம்பெரும் தோழர்கள் சாம்ராவ் பருலேகர் மற்றும் கோதா வரி பாருலேகர் தலைமையில் நடத்தப்பட்டது.  1978க்குப் பிறகு நடந்த மாநி லச் சட்டமன்றத் தேர்தல்களில் 10க்கு 9 முறை சிபிஎம் தஹானு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் சிபிஎம் அடுத்தடுத்த தேர்தல்களில் 5 வெவ் வேறு வேட்பாளர்களுடன் போட்டி யிட்டது சிறப்புமிக்கது ஆகும். 2019இல் வினோத் நிகோல் முதன் முதலில் தஹானு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பொழுது, சிட்டிங் பாஜக எம்எல்ஏ பாஸ்கலை தோற்கடித்தார். இம்முறையும் பாஜகவுக்கு எதிராகத்தான் வினோத் நிகோல் முக்கியப் போட்டியாளராக உள்ளார்.

21 பொதுக் கூட்டங்கள்

சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோல் ஞாயிறன்று பிரச்சாரப் பொ துக்கூட்டங்களை துவக்கினார். எம்விஏ கூட்டணி சார்பில் நவம்பர் 17 வரை வினோத் நிகோலுக்கு ஆதர வாக தொகுதி முழுவதும் மொத்தம் 21 பிரச்சாரக் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. தலசாரி, தஹானு ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட பஞ்சாயத்துக்க ளில் ஒவ்வொன்றிலும் வினோத் நிகோலுக்கு ஆதரவாக 14 பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதே போல அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சுமார் 7 பிரச்சா ரப் பொதுக்கூட்டங்கள் பெண்கள் தலைமையிலும் நடத்தப்படு கின்றன. இந்த முக்கிய பொதுக் கூட்டங்களுடன் பல கிராமங்களில் கூடுதலாக பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பிருந்தா காரத், அசோக் தாவ்லே பங்கேற்பு

நவம்பர் 12-13 தேதிகளில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், அசோக் தாவ்லே, மத்தியக் குழு உறுப்பினர் மரியம் தாவ்லே, மாநிலச் செயலாளர் டாக்டர்.உதய் நர்கர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கிசான் குஜார், கிரண் கஹாலா உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஊழியர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.  அதே போல எம்விஏ கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் கேட், தேசியவாத காங்கி ரஸ் கட்சியின் சார்பில் மிஹிர் ஷா, காஷிநாத் சவுத்ரி, சிவசேனாவின் (உத்தவ்) மிலிந்த் வைத்யா, சஞ்சய் பாட்டீல் மற்றும் கஷ்டகாரி சங்கா தனா சார்பில் பிரையன் லோபோ, மது தோடி உள்ளிட்டோர் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோ லுக்கு ஆதரவாக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

பாஜகவிற்கு எதிராக  வீதி நாடகம்

மாணவர் மற்றும் வாலிபர் அணிகள்  வினோத் நிகோலுக்கு ஆதரவாகவும் மக்கள் பிரச்சனை கள் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜகவால் தூண்டப்பட்ட ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான அரசி யலை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வீதி நாடகத்தை நடத்தி வருகிறது. இந்த வீதி நாடகத்தை அமைக்க சுதன்வ தேஷ்பாண்டே உதவி வருகிறார். அதே போல ஆயிரக்கணக் கான பயனுள்ள தேர்தல் துண்டுப் பிரசுரங்கள் வீடு வீடாகவும், கிராமம் கிராமமாகவும் விநியோ கிக்கப்படுகின்றன. மேலும் வினோத் நிகோல் எம்எல்ஏ மற்றும் சிபிஎம் கட்சி கடந்த 5 ஆண்டு களில் தஹானு பகுதியில் மேற் கொண்ட போராட்ட மற்றும் வளர்ச்சிப் பணிகளை விவரிக்கும் 32 பக்க கையேடு பரவலாக விநியோ கிக்கப்பட்டு வருகிறது.