குறுகிய காலத்தில் நிறைவு பெறும் டி-20 கிரிக்கெட்டிற்கு விளையாட்டு உலகில் சற்று மவுசு அதிகம். காரணம் அதிரடி, ஆக்ரோஷம் பஞ்சமில்லாமல் நடைபெறுவ தால் தான். 20 ஓவர்களில் ஒவ்வொரு ஓவரும் சுவாரஸ்யமாக நகருவதால் கிரிக்கெட் உல கில் டி-20 தொடர்கள் முதன்மையாக உள்ளது. இந்நிலையில் இந்த டி-20 போட்டி களுக்கு ஐசிசி புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளது. டி-20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸை நிறைவு செய்ய நிர்ணயம் செய்யப்படும் 90 நிமிடங்களில் 20-வது ஓவ ரைத் தொடங்கியிருக்க வேண்டும். கூடுதல் நேரத்துடன் இன்னிங்ஸை நிறைவு செய்தால் அபராதம் விதிக்கப்படும். இதுதான் பழைய விதி.
தற்பொழுது ஐசிசி அறிவித்துள்ள புதிய விதியில் 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால் 30 யார்ட் வட்டத் திற்கு வெளியே நிற்கும் பீல்டர்களில் ஒரு வரை உள்ளே கொண்டு வர வேண்டும். உதாரணமாக 17-வது ஓவர் தொடங்கும் போது ஒரு இன்னிங்ஸிற்கான (90 நிமிடம்) நேரம் நிறைவடைந்து விட்டால் கடைசி 3 ஓவர்களில் 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே ஒரு பீல்டரை வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். ஐசிசியின் இந்த புது விதியால் பந்துவீசும் அணிகளுக்கு மோசமான பாதிப்பு ஏற்படும். ஜனவரி 16-ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் - அயர்லாந்து அணி களுக்கு இடையிலான டி-20 தொடரில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப் படவுள்ளது. அபராதம் விதித்தால் கிரிக்கெட் விதிகள் பணத்திற்கு விற்கப்படுவதாக அமையும் என்பதை உணர்ந்து புதிய விதிகள் மூலம் போட்டிக்குள் சிக்கலை உருவாக்கி கிரிக் கெட் விளையாட்டை மேலும் சுவாரசியத் திற்குள் கொண்டு வந்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.
என்ன பாதிப்பு ஏற்படும்?
பொதுவாக டி-20 ஆட்டங்களில் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தின் தன்மை மாறும். உதாரணமாக முதல் பேட்டிங் செய்யும் அணி விக்கெட்டுகளை தக்கவைத்து விளை யாடி கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளை யாடும். அவ்வாறு அதிரடியாக விளையாடு வதால் பெரும்பாலான பந்துகள் எல்லை கோட்டுக்கு தான் பறக்கும். இதனால் பந்து வீசும் அணிகள் பெரும்பாலான வீரர்களை எல்லைக்கோட்டிற்கு அருகே கேட்சிற்காக நிறுத்தி வைக்கும். தற்போது ஐசிசி கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையால் ஒரு பீல்டர் குறையும் என்பதால் பந்துவீசும் அணிக்கு இது சற்று சிக்கலை உருவாக்கும்.