“சாதுவான உயிரினத்தை எப்படிக் கொல்ல முடியும்.அப்படி கொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,”என்று மானை வேட்டையாடுவது குறித்து வலைப்பதிவிடும் நாயகி,சக மனித உயிர்களைக் காக்க கொலையும் செய்யத் தயங்கமாட்டாள் என்கிறது,”பாரடைஸ்”என்ற சிங்களப்படம்.
கேரளாவைச் சார்ந்த மும்பை தம்பதி கேசவ், அமிர்தா, இலங்கைக்கு இராமாயணச் சுற்றுலா செல்கின்றனர். பொருளாதார நிலை உயர்ந்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவில் ஐந்து வருடமாக குடும்பம் நடத்துகின்றனர். இவர்கள் சுற்றுலா செல்லும் 2022 இல், இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கின்ற நேரம். பெட்ரோல், டீசல்,மின்சாரம்,கேஸ் போன்ற அத்தியா வசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள்,ராஜபக்ஸே அரசை எதிர்த்து தெருவில் இறங்கி போராடுகின்ற சூழல்.
இவர்களை ஈப்பில் வழிகாட்டியாக அழைத்து செல்பவர் சிங்கள ஓட்டுநர் ஆண்ட்ரு. பயணத்தின் போது கேசவுக்கு சந்தோசமான செய்தி ஒன்று கிடைக்கி றது. நெட் !ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் கேசவின் இந்திய பதிப்பிலான ஒன்பது அத்தியாயங்கள் அடங்கிய ஸ்குயிட் கேம்ஸ் (Squid Games) பற்றிய திரைக்கதைக்கு நிதி உதவி செய்ய ஒப்புக்கொண்டதே அந்தச் செய்தி. இந்த மகிழ்ச்சியோடு மக்கள் நடத்தும் போராட்டங்களுக்குள் ஆங்காங்கே சிக்குகின்றனர். சுற்றுலா பயணி என்ற காரணத்தால் எந்த தாக்குத லுக்கும் உள்ளாகாமல், மலையகத் தங்கும் விடுதியை அடைகின்றனர். விடுதியின் சமையலர் இக்பால். மேற்பார்வையாளர் ஸ்ரீ.இருவரும் மலையகத் தமிழர்கள். பொருளாதாரப் பிடிப்பு ஏற்பட்டுள்ள இத்தருணத்தில், மகிழ்ச்சியின் எல்லையில், ஐந்து வருட விரக தாபத்தை முடிவுக்கு கொண்டு வரு கிறார்கள். அந்நேரத்தில் உள்ளூர் திருட்டுக் கும்பல், இவர்கள் உறங்கும் அறையில் அத்துமீறி நுழைந்து, கத்தி முனை யில் இருவரது செல்போன்கள், கேசவின் மடிக்கணினி போன்றவற்றை திருடித் தப்பிக்கிறார்கள். கெடு வாய்ப்பாக, திரைக்கதை, படஆக்கம் குறித்த அனைத்து விபரங்களும் மடிக்கணினியோடு போய்விடு கிறது. பிரகாசமான எதிர்காலக் கனவைச் சுமந்துள்ள மடிக்கணினியை கண்டுபிடிக்க,சிங்கள காவல் நிலையத்தின் சார்ஜண்ட் பண்டாராவிடம் முறை யிடுகின்றனர். மடிக்கணினி கிடைத்ததா? தம்பதியின் எதிர்காலம்.....?
சீதையைச் சிறை மீட்ட ராமன் அவளது கற்பை மெய்ப்பிக்கத் தீக்குளிக்கச் சொல்கிறான். அவளும் தீக்குளிக்கிறாள். பெயர் பெற்ற சீதை தீக்குளித்த இடத்தை பார்க்கச் செல்லும் நவீன சீதையான அமிர்தாவோ, கணவன் மான் வேட்டையாடும்போது உடனிருந்து மானை காக்கிறாள். திருடர்கள் அடையாள அணி வகுப்பில்,கணவன் பொய் சொல்ல வலியுறுத்துகிறான். ஆனால் அமிர்தா அதனை மீறி உண்மையை உறுதியாகச் சொல்கிறாள். மடிக்கணினி திருடியதாக சந்தேகப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட மலையகத்தமிழன்,போலீஸ் காவ லில் தாக்கப்படுகிறான்.அரசு மருத்துவமனை சிகிச்சை யில், ஆக்ஸிஜனின்றி இறக்கிறான். கேள்விப்பட்ட ஊரார் தங்கும் விடுதி நோக்கி கத்தி கபடாவோடு திரண்டு வருகிறார்கள்.அப்போது ராணுவவீரனின் துப்பாக்கியை வைத்துள்ள கேசவை, தற்காப்பிற்காக கூட கூட்டத்தினரை நோக்கிச் சுடவேண்டாம் என்கி றாள். ஆனால் கணவன் கேசவோ, பிறரைப் பற்றி கவலையின்றி,அவன் வகுத்த நியாயப்படி, மனைவி யின் முடிவுகளுக்கு எதிராகவே செயல்படுகிறான். இப்போது அமிர்தா,ராமனை அடியொற்றி நடந்த சீதா வைப் போலன்றி எதிர்பாரா கடுமையான முடிவெ டுக்கிறாள். குடிமக்களைக் காட்டிலும், சுற்றுலாப் பயணியின் நலனிலே அக்கறை காட்டும்,சுற்றுலாச் செலவாணி யை நம்பியுள்ள இலங்கை அரசு. இராமாயணத்தில் வரும் ராமன், சீதை, இராவணன், அனுமன் ஆகி யோரைப் பற்றிய இலங்கை மக்களின் நம்பிக்கைகள்; உள்நாட்டு அரசியல் போக்குகள். இவற்றோடு கேசவ், அமிர்தா வாழ்வையும், திரை மொழியில் இணைத்து, பல உருவக அடுக்குகளில் பார்வையாளர்களை சிந்திக்க வைத்து, அழகிய திரையனுபவத்தை தந்துள்ளார் இயக்குநர் பிரசன்னா விதானஹே.
அமிர்தாவிடம், இராவணன் புதைக்கப்பட்ட இடத்தைச் சுட்டிக் காட்டும் ஆண்ட்ரு, “இராவணன் இறக்கவில்லை. அவர் நீண்ட உறக்கத்தில் இருக்கி றார். ஒரு நாள் விழிப்பார். அன்றுமுதல் இலங்கை, இராவணனால் காக்கப்படும் என்ற நம்பிக்கை இன்றும் இலங்கை மக்களிடம் உள்ளது” எனக் கூறுகின்றார். அதற்கு அமிர்தா, “இராவணன் இப்போது விழித்தால், சீர்குலைந்துள்ள இலங்கை பொருளாதாரம் சீரடைந்து காக்கப்படும்” என நக்கல் செய்கிறாள். மேலும் அமிர்தா அதே செய்தியை, கணவனி டம்,”இப்போது இராவணன் விழித்து விட்டால், என்னைக் கடத்தி விடுவானே?”எனக் கிண்டல டிக்கிறாள்.அதற்கு கேசவ், “அப்படி நடந்தால் எனக்குள் உள்ள ராமன் விழித்து, இராவணணோடு போர் புரிவான்”என்று கூறும் வசனத்தின் மூலம் கேசவ் பாத்திரத்தின் தன்மை உணர வைக்கப்படுகிறது. பாத்திரங்களின் ஆழ்மனவோட்டங்களை, நெகிழ்வான மெல்லிய இசையை தந்து சிறப்பித்துள்ளார், இசை யமைப்பாளர் கே. தர்ஷணா ராஜேந்திரன் அமிர்தாவாக தனது கண்களாலே கோபத்தை வெளிக்காட்டி மிகச் சிறந்த நடிப்பை தந்துள்ளார். ரோஷன் மாத்யூ கேசவாக, தனது கோபத்தின் நியாயத்தை கூரிய பார்வையிலே காண்பித்து அசத்தியுள்ளார். இதேபோல் காவல் நிலைய சார்ஜண்டாக வரும் மகேந்திர பெரரா தனது அதிகாரத்தை கேசவிடம் காட்ட முடியாமல் அடங்கிப் போகும் சமயத்தில் சிறப்பான நடிப்பை தந்துள்ளார். மற்றனைவரும் உணர்வுப்பூர்வமான நடிப்பைத் தந்துள்ளனர். புளிப்பு கொய்யாவை விற்கும் தமிழ் குழந்தை களை காட்சிப்படுத்திய கையோடு மண் அரித்த வேர்கள் தெரியும் மரத்தை பொருளாதார சரிவுக்கான குறியீடாகக் காட்டி,இலங்கையின் இயற்கை அழகை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ராஜீவ் ரவி.ஸ்ரீகர் பிரசாத்தின் கச்சிதமான படத்தொகுப்பு. தன்னைச் சுற்றியுள்ள நடப்புகளையும் தன் நிலை யோடு கணக்கிலெடுத்து விடை கண்டு அதன்படி வாழ்கின்ற வாழ்வே சொர்க்கத்திற்கு இணையானது என்பதை ஒரு ஹைக்கூ கவிதை போல் சொல்லி யுள்ளது இப்படம். இலங்கையின் முன்னணி இயக்கு நர்களில் பிரசன்னா விதானஹே குறிப்பிடத்தக்கவர். தென்கொரியாவின், 2023 பூசன் (Busan) உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான உயரிய விருது “கிம் ஜெஷியாக்” பெற்றுள்ளது இப்படம். பிரைம் அமேசானில் இந்தப் படம் உள்ளது.