குடும்பத் தகராறில் மனைவி படுகொலை: இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கைது
குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொலை செய்து விட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக நாடகமாடிய இந்து முன்னணி மாவட்டச் செய லாளர் கைது செய்யப்பட்ட சம்ப வம் நாமக்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே போத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் இந்து முன்னணி அமைப்பின் நாமக்கல் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், ஞாயிறன்று இவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இத னையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, கீதாவும் அவரது கணவர் ஜெகதீசனும் வெட்டுக் காயங்களுடன் கீழே கிடந் துள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்களன்று காலை கீதா உயிரிழந் தார். காயமடைந்த ஜெகதீசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளரின் வீட்டிற்குள் புகுந்து, மர்ம நபர்கள் ஜெகதீசனை யும், அவரது மனைவியையும் வெட்டிவிட்டதாக இந்துத்துவ அமைப்பினர் கலவர நோக்கத் தோடு செய்தியை பரப்பினர். இத னால், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் பரமத்தி வேலூர் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப் போது ஜெகதீசன், அடையாளம் தெரியாத நபர்கள் தனது மனை வியை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாகவும், தடுக்க முயன்ற போது தனக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசார ணையை தீவிரப்படுத்தினர். அதில் ஜெகதீசனே தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடக மாடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையை போலீ சார் தீவிரப்படுத்தினர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், “உயிரி ழந்த கீதாவின் தாயார் தனலட்சுமி பரமத்திவேலூர் காவல் நிலையத் தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகள் கீதாவுக்கும் அவரது கணவர் ஜெகதீசனுக்கும் கடந்த ஒரு மாதமாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகவும், தனது மக ளின் இறப்பிற்கு ஜெகதீசன்தான் காரணம் என்றும் தெரிவித்தார். இத னடிப்படையில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கொலை நடந்த சமயத்தில் வெளியாட்கள் வந்து சென்றதற்கான எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. மேலும், அடையாளம் தெரி யாத நபர்கள் அரிவாளால் வெட்டி யதாக ஜெகதீசன் கூறிய நிலை யில், கீதாவின் கழுத்தில் மட்டும் கத்தியால் அறுத்தது போன்ற ஒரே ஒரு காயம் இருந்தது. உடலில் வேறு எந்த காயங்களும் இல்லாத தால் ஜெகதீசன் மீது எங்களுக்கு சந்தேகம் வலுத்தது. ஜெகதீசன் தன்னைத் தானே தலை மற்றும் கை பகுதிகளில் கத்தியால் வெட்டிக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டது தெரியவந்தது. இதனடிப்படையில், கீதாவை அவர்தான் கொலை செய்திருப் பார் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்த போலீசார், ஜெகதீசனை கைது செய்து விசாரைண மேற் கொண்டு வருகின்றனர்.