tamilnadu

img

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.23- சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை  பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் கடந்த 1997ஆம் ஆண்டில் 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள்  நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் 5 ஆண்டுகள் பணி முடித்த சாலைப் பணியாளர் களை, பின்னர் 2001 இல் ஆட்சிக்கு வந்த தமிழக அரசு, நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனியார்வசம் வழங்கும் கொள்கை முடிவை, உலக வங்கி நிபந்தனையின் அடிப்படை யில் எடுத்ததின் காரணமாக, சாலைப் பணியாளர் பணியிடம் தேவை யில்லை என்று கருதி சாலைப் பணி யாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இப்பணி நீக்கத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை யும், நீதிமன்ற வழக்கினையும் முன் னெடுத்ததன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் சாலைப் பணியாளர்கள் 13- 2- 2006 முதல் மீண்டும் பணி நியமனம் பெற்று பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில் சாலைப் பணியாளர்களின் பணி நீக்கக் காலமான 41 மாத காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.  அவ்வாறு வலியுறுத்தி வந்த நிலையில், அரசு இக்கோரிக்கையை கண்டு கொள்ளாததால், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணி யாளர் சங்கம், சென்னை உயர் நீதி மன்றம் பணி வழங்கிய  உத்தர விலேயே, சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக் கால மாக முறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. மேற்சொன்ன தீர்ப்பை நடை முறைப்படுத்தாத நிலையில் சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்திட அரசுக்கு நீதிப் பேராணை வழங்க  வேண்டும் என்று கேட்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பாக சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ( எண் WP  24797/2015) அக்டோபர் 23 புதன்கிழ மையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்  காலமாக முறைப்படுத்த வேண்டும் என நீதிமன்ற ஆணை வழங்கி யுள்ளது. சாலைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதி யாக நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி நடத்திய உன்னதமான உரிமை போராட்டம் வென்றது. உரிமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது மேற்சொன்ன வழக்கினை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வரலா ற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் கே. எம். ரமேஷ் மற்றும்  அவரது குழுவினருக்கும் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பாக நெஞ்சம் நிறை ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள் கிறேன் என்று தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் கூறியுள்ளார்.