சென்னை, நவ.2- தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட் டங்களில் ஞாயிற்றுக் கிழமை (நவ.3) கன மழை பெய்ய வாய்ப்பு உள் ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற் றும் காரைக்கால் பகுதிகளி லும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதேநேரம், கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, தென் காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவ கங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங் களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓர ளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.