tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழகத்தில் வெப்ப அலை வீசும்

“தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை  வீசக்கூடும்” என சென்னை வானிலை மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம்  

ரயில் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரை, ஏ.சி. 2-ம் வகுப்பு 50 கிலோ வரை, ஏ.சி. 3-ம் வகுப்பு மற்றும் முன்பதிவு படுக்கை பெட்டிகள் 40 கிலோ வரை, 2-ம் வகுப்பு பெட்டிகள் 35 கிலோ வரை மட்டுமே இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். நிர்ணயிக் கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ எடைக்கு 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதகர்கள் இதனை கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.32 லட்சம் பேர் பயணம்

தலைநகர் சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்து களில் பயணித்துள்ளனர். ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 அதிகாலை 2 மணி வரை, வழக்கமான 2,092 பேருந்துகளுடன் 1,153 சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 6,049 பேருந்து களில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர்.