tamilnadu

img

மலக்குழி மரணங்களைத் தடுக்க; கையால் மலம் அள்ளுவதை ஒழிக்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

மதுரை, டிச.23- இந்தியா முழுவதும் தூய்மைப்  பணியாளர்கள் குறித்த கணக் கெடுப்பை நடத்த வேண்டும். இந்தியா விலேயே சிறந்த மாநிலங்கள் பட்டிய லில் முதலிடம் பெற்றுள்ள தமிழகம் இந்தப் பணியை முதலில் தொடங்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுராஜ் வலியுறுத்தியுள்ளார். விஷவாயு தாக்கி பலியானோருக்கு நீதிகேட்டு மதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் “மலக்குழியில் மடியலாமா மானு டம்...” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்துகொண்டு கே.சாமுவேல்ராஜ் பேசியதாவது:- தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என  அழைக்கப்படுகின்றனர். அவர்கள் கைகளால் மட்டுமல்ல “உடலால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்”. குறிப்பாக இவர்களை தொழிலாளர்கள் என்று அழைப்பதே தவறு. மிகச் சிறந்த சமூகப்பணியாற்றுபவர்கள் அவர்கள். உடலால் மலம் அள்ளுவதற்கென்றே ஒரு பிரிவு இருக்கிறது. எனவே இதை நவீனப்படுத்த வேண்டியதில்லை என்ற  மோசமான சிந்தனை இந்திய அள வில் உள்ளது. இதற்கு சாதியமும், சனாதனமும் தான் காரணம். விஞ்ஞான உலகத்தில் எவ்வளவோ மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால்,  கையால் மலம் அள்ளுபவர்கள் இன்றைக்கும்  விளக்குமாறைத் தான் பயன்படுத்துகின்றனர். நவீன கட்டண கழிப்பறைகளை சுத்தப்படுத்து பவர்கள் இவர்கள். ஆனால், அதற் கான தொகையை பெறுவது இந்தப் பிரிவிற்கே தொடர்பில்லாதவர். இந்த நவீன கட்டண கழிப்பறை  ஒப்பந்தத்தைக் கூட இவர்கள் எடுக்கக்கூடாது என்ற மோசமான சிந்தனையும் வளர்ந்துள்ளது

தமிழக அரசு மக்கும் குப்பை,  மட்காத குப்பை என பிரித்துக் கொடுக்க வேண்டுமென மக்களை வலி யுறுத்துகிறது. ஆனால், அது முழுமை யாக நடைபெறவில்லை. மக்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்துக் கொடுத்தால் தான் வாங்குவோம் எனக் கூறுமளவிற்கு இவர்களிடம் தைரி யம் இல்லை. ஏனெனில் அவர்களது வாழ்க்கைச் சூழல் அப்படி. மக்கள்  ஒவ்வொருவரும் மக்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்கு வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கையால் மலம் அள்ளு பவர்கள் இல்லையென்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும். நவீனக் கருவிகளை கண்டுபிடிக்க சுகாதார பொறியியல் துறையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்கவேண்டும். கையால் மலம் அள்ளுவதைத் தடுக்க   சுகாதார-பொறியியல் பிரிவைத் தொடங்கி புதிய கருவிகளை கண்டு பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொள்ளும் என்றார்.

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசுகை யில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடி யினர் நலத்துறையை தமிழக அரசு  உருவாக்கியுள்ளது. அதன் செயல்பாட்டை கூடுதலாக்க வேண்டும்.  வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆதிதிராவிடர்-பழங்குடியிருக்காக தனியாக நிதி ஒதுக்கீடு உள்ளது. இந்தத் தகவலை அவர்களிடம் கொண்டு சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக ஒரு லட்சத்து ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் பயன்பாடு குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். பல நூறு ஆண்டுகளாக ராஜாக் களுக்கு, மன்னர்களுக்கு, ஜமீன்தாரர் களுக்கு, பிரிட்டிஷாருக்கு சேவை செய்து வந்த நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் கார்ப்ப ரேட்டுகளுக்காகத்தான் வாழ்கிறோம். அவர்களுக்கு சேவை செய்கிறோம். நமக்காக நாம் எப்போது வாழப்போகி றோம்?. நாம் நமக்காக வாழ வேண்டும் என்ற குரல்கள் எழும்போது பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சாதி களால் மக்களை மோதவிடுகிறது. ஒரே  நாடு, ஒரே ரேஷன்கார்டு, ஒரே மொழி  எனக் கூறும் பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு,  “ஒரே சாதி” என அறிவிக்கத் தயங்குவது ஏன்? “ஒரே சாதி” என்ற குரல் இந்தியா முழு வதும் எழ வேண்டும். அதனொரு பகுதி யாக தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு  முன்னணி சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்தவேண்டும். மலக்குழி மரணங் களைத் தடுக்க சமூகப் போராட்டத்  தோடு இணைந்த சட்டப் போராட்டத் தையும் நடத்த வேண்டுமென்றார்.

கருத்தரங்கிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலை வர் த.செல்லக்கண்ணு தலைமை வகித்தார். பத்திரிகையாளர் ஜெய ராணி, வழக்கறிஞர் பிலோமின்ராஜ், சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குநர் செல்வகோமதி ஆகி யோர் கருத்துரையாற்றினர்.  கருத்தரங்கில் பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் நிர்வாகிகள்  எம்.பாலசுப்பிரமணியன், ஆர்.சசிகலா,  ஜா.நரசிம்மன், செ.முத்துராணி, செ.ஆஞ்சி, பி.மகாலிங்கம், சுரேஷ்குமார்,  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.கதிர வன், தூய்மைப் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் கே.குருசாமி, ஆதி தமிழர்  பேரவை கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் இரா.செல்வம், தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் க.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.