நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அகில இந்திய தலைவர்கள் வெண்மணித் தியாகிகள் நினைவிடத்திற்கு சென்றனர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, நிதிச் செயலாளர் கிருஷ்ண பிரசாத், இணைச் செயலாளர் விஜூகிருஷ்ணன், மத்திய செயற்குழு உறுப்பினர் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினருமான வி.பி.நாகைமாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டு செவ்வணக்கம் செலுத்தினர்.