tamilnadu

img

சமூக நீதிக்கு எதிராக ஆளுநர்: திரும்பப் பெற சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,பிப்.8- தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்து  மீண்டும் கொண்டுவரப்பட்ட பழைய  தீர்மானத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசியது வருமாறு:-

ஆளுநர் துரோகம்

 தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்க ளிக்க வேண்டுமென்ற மசோதாவை 5 மாத காலங்களுக்கு கிடப்பில் போட்டு அதை மீண்டும் நமக்கே  திருப்பியனுப்பியுள்ள தமிழக ஆளு நரின் செயலானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை  காயப்படுத்துகிற செயலாகும். தமிழக மக்களுக்கு இழைக்கப்பட் டுள்ள மாபெரும் துரோகமாகும். அதுமட்டுமல்ல, அரசியல் சாசன வழிகாட்டு நெறிமுறைகளை அப்பட்டமாக மீறி எடுக்கப்பட்டிருக் கிற ஆளுநரின் தன்னிச்சையான, எதேச்சதிகாரமான நடவடிக்கையா கும். பொதுப்பட்டியலில் உள்ள ஒரு  பொருள் குறித்து மாநில சட்டமன்றம்  ஒரு மசோதாவை நிறைவேற்றினால் அதை அந்த மாநில ஆளுநர் ஒன்றிய  அரசுக்குதான் அனுப்ப வேண்டுமே தவிர, அதன் மீது தனது கருத்தை வெளிப்படையாக கூறுவதோ அல்லது அந்த மசோதாவை திருப்பி அனுப்புவதோ கூடாது. அப்படி  திருப்பி அனுப்பி யுள்ள ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் முரணானது; முற்றிலும் விரோதமானது.

உள்ளங்கை நெல்லிக்கனி!

நீட் தேர்வு குறித்து மாநில அசரால்  அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழு பரிந்துரை தமிழக மக்களின் உணர்வுகளை உள்ளங்கை நெல்லி க்கனியாய் எடுத்துக் காட்டுகிறது. இந்த குழு தமிழக மாணவர்களின் கருத்தைக் கேட்டது, கல்வியா ளர்களின் கருத்தைக் கேட்டது. பெற் றோர்களின் கருத்தை கேட்டது. அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டது. இதற்குப் பின்னர் தான் நீட் தேர்வு தமிழகத்தில் ஒரு பெரும் சமூக தாக்கத்தையும், மாணவர்களிடையே ஒரு உளவியல் தாக்கத் தையும் ஏற்படுத்தும் எனவும், இத்தகைய தேர்வு முறை  பெரும்பகுதி மாண வர்களின் மருத்துவக் கல்வியை பறித்து, எட்டாக் கனியாக மாற்றும் என தனது கருத்தை உறுதியாக கூறி யது. எனவே தான் நீதிபதி ஏ.கே. ராஜன் குழு நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் எனவும், தமிழ கத்திற்கு விலக்களிக்கப்பட வேண்டும் எனவும் பரிந் துரை செய்திருக்கிறது. எனவே, ஆளுநரின் நடவடிக்கை தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், மாண வர்களின் உணர்வுகளுக்கும், கூட்டாட்சி நெறிமுறைகளுக்கும் எதி ரானது என்பதை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆகவே தமிழக ஆளுநரின் நடவடிக்கை ஒரு  தலைபட்சமானதாகும்.

கரம் கோர்ப்போம்!

8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இந்த மாமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் இயற்றிய சட்டத்தை நமக்கே திருப்பி அனுப்பியதன் மூலம் ஆளு நர் ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்கியுள்ளார். தமிழக சட்டப் பேரவையின் மாண்பை அவமதித் துள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான இம்மாமன்றத்தின் குரலை யாரும் நிறுத்தி விட முடியாது. சமூக நீதிக் கோட்பாட்டின் விளை நிலம்  நம் தமிழ்மண். இந்த மண்ணி லிருந்து கொண்டு சமூக நீதிக்  கோட்பாட்டிற்கு எதிராக செயல்படும்  யாரையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என எச்சரிக்கை செய்ய  விரும்புகிறோம். எனவே, தமிழக  மக்கள் விரும்பாத நீட் தேர்வுக்கு  எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளு க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரம் கோர்த்து உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். மேலும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், சமூக நீதிக்கு எதிராகவும், தன்னிச்சையாகவும், எதேச்சதிகாரமாகவும் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை உடனடி யாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.