tamilnadu

img

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் ஆதரவு

மயிலாடுதுறை, மார்ச் 25 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற் குழு கூட்டம் மயிலாடுதுறை திருஇந்த ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மயிலாடுதுறை மாநில தலைவர் நெ.இல.சீதரன் தலைமையில் வியா ழனன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் வ.பழனிவேலு வரவேற்று பேசினார்.  மாநிலத்தின் அனைத்து பகுதிகளி லிருந்தும் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கை யை முன்வைத்து பேசினார்.  கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் களை சந்தித்த மாநில தலைவர் இல. ஸ்ரீதரன் கூறுகையில், மார்ச் 28, 29 தேதி களில் ஒன்றிய பாஜக அரசை கண்டி த்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள 48 மணி  நேர பொது வேலைநிறுத்த போராட்டத் திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் முழு ஆத ரவு அளிக்கிறது.

மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத் தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களில் ஓய்வூதியர் சங்கத்தி னர் திரளாக கலந்து கொள்வார்கள். நிலுவையில் உள்ள 20 ஆயிரம் மருத்துவ நிலுவை பட்டியல்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும்.  70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதி யர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 19 அன்று வட்ட தலைநகரங் களிலும், மே 17 அன்று மாவட்ட மையங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தவும், ஜூன் 21 அன்று மாநில அளவில் பெருந்திரள் முறையீடு நடத்த வும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மாநில செயற்குழு உறுப்பி னர் இளமாறன் நன்றி கூறினார்.