தஞ்சாவூர், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் கிராமத்தில், தீண்டாமை வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி நேரில் சந்தித்து, நடந்த சம்பவங்கள் குறித்து கேட்ட றிந்து, பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் குரல் கொடுக்கும் என உறுதியளித்தார். கிளாமங்கலம் கிராமத்திற்கு திங்கள்கிழமை காலை உ.வாசுகி மற்றும் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், எம்.செல்வம், கே.அருளர சன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மோகன்தாஸ், அரங்கசாமி, பாஸ்கர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
கள ஆய்வு
கிளாமங்கலம் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களை நேரில் சந்தித்த போது, துயரம், கோபம், ஆதங்கம், இயலாமை, ஆவேசம் என பல குரல்களில் அம்மக்கள் சிபிஎம் நிர்வாகிகளி டம் கூறியதாவது: “பல ஆண்டுகளாக இப்பகுதியில் தீண் டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. சாதி ஆதிக்கத்தி னர் பட்டியல் இன மக்களை தொடர்ந்து இழிவு படுத்தி வருகின்றனர். தேநீர் கடைகளில் இரட் டைக்குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறது. பட்டியல் இன மக்கள் சமமாக அமர்ந்து தேநீர் அருந்துவதை சாதி ஆதிக்கத்தினர் எதிர்த்து வருகின்றனர். முடி திருத்தும் கடைகளில் எங்களுக்கு முடி திருத்தக் கூடாது எனக் கட்டாயப்படுத்து கின்றனர். அவர்கள் தரும் நெருக்கடியால்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான முடிதிருத்தம் செய்பவரும், எங்களுக்கு முடிதிருத்தம் செய்ய மறுக்கும் சூழல் நிலவுகிறது.
அண்மையில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளியை கைது செய்துள்ளனர். சாதி ஆதிக்கத்தினரின் தூண்டுதல் மற்றும் நெருக்கடியால்தான் அவர் முடி திருத்த மறுக்கிறார். எனவே, இதற்கு காரணமான சாதி ஆதிக்கத்தினர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திய அரசியல் சட்டம் எங்களுக்கு வழங்கியுள்ள உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இந்நிலையில், சாதி ஆதிக்க சக்திகளில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவர், கார்களில் 70, 80 என்ற அளவுகளில் கடும் ஒலி எழுப்பிய வாறு ஊர்வலமாக வந்து, எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு பாலத்தின் அருகே திரண்டு கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்திற்கு வந்த சிலர் பட்டி யல் இன மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் எங்கள் பிள்ளை களை பள்ளி, கல்லூரி, வேலைக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. மேலும், எங்களுக்கு வேலை தரக்கூடாது. இவர்களை பிழைப்புக்கு வழியில்லாமல் தெருவில் விட வேண்டும் என சாதி ஆதிக்க சக்திகள் பேசி வருகின்றனர். இங் குள்ள குரும்பையனார் கோயிலில் அனைத்து சமூக மக்களுக்கும் உள்ளது போல, பட்டியல் இன மக்களான எங்களுக்கும் மண்டகப்படி உரிமை வழங்க வேண்டும்” என்றனர். பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களிடம் கேட்டறிந்த குறைகளை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உறுதி யளித்தனர்.
உ.வாசுகி பேட்டி
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்த உ.வாசுகி கூறியதாவது: ஒரத்தநாடு அருகே உள்ள கிளாமங்கலம் பகுதியில் தீண்டாமை வன்கொடுமை உள்ளது. அங்கு மட்டுமல்ல, பல இடங்களிலும் இது போல் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், சட்டத்துக்கு புறம்பாக சாதிய பாகுபாடுகள், தீண்டாமை கொடுமைகள் பல இடங்களில் நடக்கின்றன. சமூக நீதிப் பாரம்பரியம் உள்ள தமிழகத்தி லும் பல கிராமங்களில் தீண்டாமை வன் கொடுமை தொடர்கிறது என்பது அவலமான விஷயம். கிளாமங்கலம் கிராமத்தில் இரட்டை குவளை முறை, முடி திருத்த மறுப்பது உள்ளிட்ட விஷயங்களுக்காக உள்ளூர் பட்டியல் இன மக்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சக்திகள், பட்டியல் இன மக்களுக்கு மளிகை கடைகளில் பொருட்கள் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளனர். இது ஒரு பெரும் பிரச்ச னையாக எழுந்துள்ளது. இதுகுறித்து ஒரு முறை சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துள் ளது. அந்த கூட்டத்தில் இதுபோல தீண்டாமைக் கொடுமையே நடக்கவில்லை என, வெளிப்ப டையாக நடந்த குற்றத்தை மறுக்கக் கூடிய நிலைமைதான் உள்ளது. அரசுத் தரப்பு அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தி, தீண்டாமை கொடுமை நடக்கி றது என அறிக்கை கொடுத்துள்ளனர். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் வாய்மூடி மௌனியாக உள்ளனர். மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரி வித்துள்ளனர். இந்த கூட்டத்திலாவது பாதிக்கப் பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதற்குக் காரணமாக உள்ள சாதி ஆதிக்க குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த கிராம மக்களை சந்தித்தபோது, இது போன்ற தீண்டாமை கொடுமை நீண்ட கால மாக இருப்பதாக தெரிவித்தனர். தாமாகவே முன்வந்து இப்படி உள்ள சாதிய தீண்டாமை வன்கொடுமைகளை களைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் தீண்டாமை ஒழிப்பு காவல் பிரிவும் முன்வர வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான கோயில் களில் வழிபாடு நடத்தும் உரிமையை பட்டியல் இன மக்கள் போராடிப் பெற்றுள்ளனர். தற் போது அந்த கோயிலில் மண்டகப்படி உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர். சாலையில் மாடு கட்டி வைத்தார் என ஒரு பெண்ணை சாதி ஆதிக்க சக்திகள் அடித் துள்ளனர். அதேபோல் கடந்த காலத்தில் கோயி லுக்கு சென்றார் என ஒரு பட்டியல் இன இளை ஞரை கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் அனைவருக்கும் பொதுவானது என்ற நிலையில், ஒரு பிரிவினரை அனுமதிக்க மறுப்பது என்ன நியாயம்? எனவே வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கண்காணிப்புக் குழு ஒன்று அமைத்து கண்காணிக்க வேண்டும் என மாநில முதலமைச்சருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகோள் வைக்கி றோம்.
இதேபோல் ஒரு சாதி அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் ஏராளமான வாகனங்களில் அப்பகுதிக்கு வந்துள்ளார். அவருடைய பேச்சும், அவருடன் வந்தவர்கள் பேசிய பேச்சுக் களும் பட்டியல் இன மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, அந்த தலைவர் மீதும் அவருடன் வந்தவர்கள் மீதும் பட்டியலின மக்களை அச்சுறுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இப்படி வன்முறையை தூண்டும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது. பட்டியல் இன மக்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் வரவேண்டும். அவர்கள் இதர பிரிவினரின் நிலங்களில்தான் கூலி வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தற் போது வேலை கொடுக்கக் கூடாது எனக் கூறி வேலை இல்லாமல் உள்ளனர். எனவே, பட்டி யலின மக்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக கிடைக்க வேண்டியவற்றை, கிடைக்க செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முடி திருத்தம் செய்ய மறுத்த தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய் யப்பட்டுள்ளார். முடி திருத்தும் தொழிலா ளர்களும் சமூகத்தில் பின்தங்கிய நிலைமை யில் உள்ளவர்கள்தான். முடி திருத்தம் செய்யக் கூடாது என அவரை கட்டாயப்படுத்தி, வற் புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 7 ஆம் தேதி ஒரத்தநாடு ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளோம். சாதியப் பாகு பாடுகளை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.