tamilnadu

img

மாண்டஸ் புயல் பாதிப்பு உரிய இழப்பீடு தருக!

சென்னை, டிச.12 - மாண்டஸ் புயல் பாதிப்பாலும், நவம்பர்  மாதம் பெய்த கனமழையினாலும் பாதிப் படைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங் கிட வேண்டுமென தமிழக அரசை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து திங்கட்கிழமை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: வங்கக் கடலில் உருவான மாண்டஸ்  புயல், சென்னை உட்பட பல மாவட்டங் களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இப்புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொண்டது.  இதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட் சித்துறை, சுகாதாரம், வருவாய்த்துறை, இயற்கை பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை என அனைத்துத் துறை ஊழியர்களும், அரசு அதிகாரிகளும், முன்களப் பணியாளர்களும் இப்பணி யை மேற்கொண்டனர். இத்தகைய நட வடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வரவேற்கிறது. இதற்கான முன்முயற்சி களை மேற்கொண்ட தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் பாராட்டுகிறது. நவம்பர் மாதம் பெய்த கனமழை யினால் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு  ஏற்பட்டது. தற்போதைய மாண்டஸ் புயலி னால் ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் கன மழையினால் எதிர்பார்த்த அளவு பாதிப்பு  இல்லை. எனினும், ஐந்துக்கும் மேற்பட் டோர் மின்சாரம் தாக்கியும், மழையினாலும் உயிரிழந்துள்ளனர்.

கால்நடைகள் உயிரி ழந்துள்ளன. வீடுகள் மற்றும் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.  சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதி களில் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தில் கடல்நீர் உட்புகுந்து உப்பளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்துள்ளன. பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. இதனால் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் மீண்டும் புயல் வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அர சுத் தரப்பில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் உள்ளன. மேலும், மாண்டஸ் புயல் தாக்கத் தால் உயிரிழந்தவர்கள், வீடுகள்-உடமை களை இழந்த மக்கள், மீனவர்கள், விவசாயி களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டும். கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.