tamilnadu

img

தோழர் பன்னீர்செல்வம் முதலாம் ஆண்டு நினைவு தினம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 10 - தீக்கதிர் நாளிதழ் திருச்சிப் பதிப்பின் முன்னாள் பொது மேலாளர் மறைந்த தோழர் எஸ்.பன்னீர்செல்வம் முத லாம் ஆண்டு நினைவு தினம் திருச்சி வெண்மணி இல்லத் தில் திங்களன்று கடைப் பிடிக்கப்பட்டது. தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். இதில் தோழர் பன்னீர்செல்வம் உரு வப்படத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மூத்த தோழர்கள் கே.வி.எஸ். இந்துராஜ், சம்பத், பி.சுப்ர மணியன், தோழர் பன்னீர் செல்வத்தின் மனைவி லிங்க ராணி, மகன் ஆனந்த்குமார்,  மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதிக் குழு செயலாளர்கள், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள், சிஐடியு மாவட்டப்  பொருளாளர் மணிகண்டன், அலுவலக செயலாளர் சுபி உள்பட பலர் அவரது படத் திற்கு மலர்தூவி செவ்வ ணக்கம் செலுத்தினர். பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் பேசு கையில், “திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் வாலி பர் சங்கத்தை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர் தோழர் பன்னீர்செல்வம். இதனால் அவர் கடுமையான தாக்குதலை சந்தித்தார். பின்பு மாவட்ட அலுவலகத்திற்கு வந்து, கட்சி அலுவலகத்தை செம்மையாக நிர்வகித்தார். சிறந்த அலுவலகச் செய லாளராகவும் திகழ்ந்தார். தனது இறுதி காலத்தில் தீக்கதி ரோடு தன்னை இணைத்துக் கொண்டார். தீக்கதிர் திருச்சி பதிப்பிற்காக கடுமையாக உழைத்தார். திருச்சி மாவட்டம் முழுவதும் தீக்கதிரை கொண்டு சேர்ப்பதுதான் தோழர் பன்னீர்செல்வத்திற்கு நாம் செலுத்தும் உண்மை யான அஞ்சலியாக இருக்கும்”  என்றார்.

;