மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரி, செவ்வாயன்று (மார்ச் 22) தலைமை செயலகத்தில் குடியேறும் போராட்டத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்திருந்தது. காவல்துறையினரின் கடும் தடைகளை மீறி சென்னையில் தலைமை செயலகம் நோக்கி சென்ற மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கம்பி முள்வேலிகள் கொண்டு தடுத்து நிறுத்தினர். இதன்பின்பு சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
விரிவான செய்தி - 10