புதுச்சேரி,டிச.5- புதுச்சேரியில் மார்க் சிஸ்ட் கட்சியின் போராட் டத்தை தொடர்ந்து மாண வர்களுக்கு இலவச பேருந்து வசதி, உணவுடன் முட்டை மீண்டும் கிடைத்தது. கொரோனா தொற்று பரவலால் புதுச்சேரி மாண வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிய உணவுடன் வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை வழங்கப்பட்டு வந்தது தடைபட்டது. பின்னர் பள்ளிகள் திறக்கப் பட்டபோது மதிய உணவு திட்டத்தை தொடர்வதற்கு புதுச்சேரி அரசு முன்வர வில்லை. இதனையடுத்து இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஜன நாயக அமைப்புகளும் அரசுக்கு கண்டனம் தெரி வித்து இயக்கங்கள் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டமும் நடை பெற்றது. இதனையடுத்து, மதிய உணவு திட்டத்தை அரசு மீண்டும் தொடங்கியது.
ஏற்கனவே மதிய உணவை மத்திய சமையல் கூடம் மூலம் விநியோகம் செய்து வந்ததை நிறுத்தி, அக்சையா பாத்திரா என்ற தனியார் நிறுவனம் மூலம் உணவு வழங்க அனுமதித்தது. அப்படி வழங்கும் உணவு சத்தானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வரை உள்ளது. எனவே, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மத்திய சமையல் கூடம் மூலமே உணவை சமைத்து அரசே நேரிடை யாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 50 ஆயிரம் மாணவர்களுக்கு பயன் அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக மாணவர்க ளுக்கு வாரத்தில் இரண்டு நாள் முட்டை வழங்கும் திட்டம் டிசம்பர் 5 முதல் மீண்டும் துவங்கப்பட்டுள் ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 293 பள்ளிகளிலுள்ள 50 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறு வார்கள். ஏற்கனவே, கிடப்பில் போடப்பட்ட இலவச பேருந்து திட்டத்தையும் முதல்வர் என்.ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான விழா கடலூர் சாலையிலுள்ள ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவா யம், கல்வித்துறை இயக்கு நர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
50 ஆயிரம் மாணவர்களுக்கு பயன்
அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக மாணவர்க ளுக்கு வாரத்தில் இரண்டு நாள் முட்டை வழங்கும் திட்டம் டிசம்பர் 5 முதல் மீண்டும் துவங்கப்பட்டுள் ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 293 பள்ளிகளிலுள்ள 50 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறு வார்கள். ஏற்கனவே, கிடப்பில் போடப்பட்ட இலவச பேருந்து திட்டத்தையும் முதல்வர் என்.ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான விழா கடலூர் சாலையிலுள்ள ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவா யம், கல்வித்துறை இயக்கு நர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.