போடி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த கார் நான்கு பேர் காயம்
தேனி, ஏப்.13- போடி அருகே கேரள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, பெங்களூருவிலிந்து வந்த சுற்றுலா சொகுசு கார் மலைச்சாலை பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது.இதில் 4 பேர் பலத்தக் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிஷோர்குமார் (44), இவரது மனைவி நித்யா (35). குழந்தைகள் ஜோஸ்வா (14), ஜோயல் (11). ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் சொகுசு காரில் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். போடிக்கு வந்த இவர்கள் போடிமெட்டு வழியாக கேரளத்துக்கு சென்றுள் ளனர். கார் போடிமெட்டிலிருந்து கேரள மாநிலம் பூப்பாறை செல்லும் சாலையில் வளைவில் திரும்பியுள்ளது. இதில் ஸ்டியரிங் பழுதானதால் திருப்ப முடியாமல் கார் நேராக சென்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. கவிழ்ந்த கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கி யது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீ ஸார் உதவியுடன் காரில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 4 பேரும் பலத்தக் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேருக்கும் போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இருந்தபோதும் காரின் பெரும் பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து கேரள மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிவியல் இயக்க கையெழுத்து இயக்கம்'
தேனி, ஏப்.13- நலவாழ்வு உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி மத்திய -மாநில அரசுகளை வலி யுறுத்தி கூடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. சுகாதாரத்தை மக்களின் அடிப்படை உரிமையாக்கும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அதற்கென தனியே சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. கூடலூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித் தார். செயற்குழு உறுப்பினர் செந்தில் வரவேற்றுப் பேசி னார். மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் தேனி சுந்தர் தொடங்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் தர மான மருத்துவ சிகிச்சையை அரசின் செலவில் வழங்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதா ரத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்ட னர். அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் முத்துக் கண்ணன், ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஆரோக்கிய உபகுழு உறுப்பினர் திலீபன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.