tamilnadu

கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை பழிவாங்கும் கல்லூரி நிர்வாகம்

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் கல்விக் கட்டண  உயர்வுக்கு எதிராக போரா டிய மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் மேற் கொண்ட நடவடிக்கைகளை இந்திய மாணவர் சங்கம்  கடுமையாக கண்டித்துள்ளது.  

2024 ஜூலை 2 முதல் 4  வரை கல்விக் கட்டண உயர் வுக்கு எதிராக மாணவர்கள்  தொடர் போராட்டம் நடத்தி னர். இதையடுத்து, ஜூலை 5 அன்று கல்லூரி நிர்வாகம் மூன்று மாணவர்களை நிரந்தரமாகவும், 11 மாணவ- மாணவிகளை இடைநீக்க மும் செய்து உத்தரவிட்டது. பின்னர், கோட்டாட்சியர் தலையீட்டின் மூலம் இந்த  உத்தரவு திரும்பப் பெறப் பட்டது. எனினும், போராட் டத்தை முன்னின்று நடத்திய மாணவர் சங்க கிளைச் செயலாளர் நேசமணி மீது மட்டும் மூன்று முறை நிரந்தர நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து பழிவாங்கும் நட வடிக்கைகளில் ஈடுபட்டு வரு வதாக சங்கம் குற்றம் சாட்டி யுள்ளது. போராடும் மாண வர்களின் பெற்றோர்களை மிரட்டுவது, மாணவர்களை தொடர்ந்து இடைநீக்கம் செய்வது போன்ற செயல் கள் நிர்வாகத்தின் வழக்க மான நடவடிக்கையாக மாறியுள்ளது. அதிகரித்து வரும் கல்விக் கட்டணத் தால் முதல் தலைமுறை பட்ட தாரிகள் மற்றும் நடுத்தர  வர்க்கப் பெற்றோர்கள் கடு மையாக பாதிக்கப்படுவதாக வும் சங்கம் தெரிவித்துள்ளது.  

அரசு கல்லூரி இல்லாததால்

இந்நிலையில், தமிழ்நாடு  அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மாணவர்கள் மீதான  அனைத்து நடவடிக்கை களையும் ரத்து செய்ய வேண்டும் என்று சங்கம் வலி யுறுத்தியுள்ளது. மேலும், தூத்துக்குடி மைய பகுதி யில் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி இல்லாத தால், தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்ப தாகவும், இதனால் ஏழை-எளிய மாணவர்களின் உயர் கல்வி கனவு பாதிக்கப்படு வதாகவும் சுட்டிக்காட்டி யுள்ளனர்.

இதற்கு தீர்வாக, தூத்துக் குடி பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.  அரவிந்தசாமி மற்றும் மாநிலத் தலைவர் தௌ.  சம்சீர் அகமது ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளனர்.