முன்னாள் அமைச்சர் மகன் கைது
சென்னை: ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை சென்னை மத்தியப் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சண்முகநாதன் மகன் ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்கு முடித்து வைப்பு
சென்னை: மனுஷி படத்துக்கு சென்சார் சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் தொ டர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்சார் போர்டு ஆட்சே பங்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு தொடரலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆகாஷ் பாஸ்கரனுக்கு உத்தரவு
சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் பட தயா ரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திர னுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதி ராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியருக்கு ஆணை
மதுரை: நெல்லை நொச்சிகுளம் ஊராட்சி நிதியில் நடை பெற்றுள்ள மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஊராட்சி நிதி பற்றி புகார் வந்தால் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில் ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் விசாரணை நடத்தி 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் நீதிமன்றம் தெரிவித்தது.
மனு தள்ளுபடி
மதுரை: தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பாண்டியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளு படி செய்தது. அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை எளிதாக ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் சி.விஜய பாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதி மன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை, அவர் தரப்பில் வழக்கு ரைஞர்கள் ஆஜராயினர். வழக்கு விசாரணையை ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி.வெங்கடேச பெரு மாள் உத்தரவிட்டார்.
ஜூலை 23 இல் குற்றச்சாட்டு
பதிவு சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வரும் ஜூலை 23 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித் துள்ளது. அன்றையதினம் குற்றம் சாட்டப் பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
விபத்து நிவாரணம் அதிகரிப்பு
சென்னை: பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலா ளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் நிவாரணம் வழங்கப் படுகிறது.
ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
சென்னை: தில்லி, ஜங்புரா பகுதியில், மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமி ழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ள சூழ்நி லையில், வீடிழந்த தமிழ் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்.
அறிவியல் சான்று உள்ளதா?
திண்டுக்கல்: “ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகி யவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்றுச் சான்று உள்ளதா? இவர் கள் (ஒன்றிய பாஜக அரசு) அரசியல் காரணங் களுக்காக வாயில் வந்த தையெல்லாம் சொன் னால், நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், தமிழுக்கு இருக் கும் தொன்மையை இவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்” என திண்டுக்கல்லில் கரூர் எம்.பி. ஜோதிமணி தெரி வித்தார்.