முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனை, உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள பின்னணியில், “தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பெண் அரசியல்வாதியை மேடையில் வைத்து கடுமையான சொற்களையோ மிரட்டும் உடல் மொழியையோ வெளிப்படுத்துவது நாகரீகமா? எல்லோரும் இதனை பார்ப்பார்கள், என்பதை அறியாதவரா அமித் ஷா? இது மிகத் தவறான முன்னுதாரணம்!” என்று ஊடகப் பிரிவு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சரவணன் கண்டித்துள்ளார்.