tamilnadu

img

மலைவாழ் மக்களுக்கு பாதை அமைத்துத் தர வனத்துறை ஒப்புதல் - போராட்டம் வெற்றி”

மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி களுக்கு செல்லும் வகையில் சாலை வசதி  செய்ய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த  விடாமல் முட்டுக்கட்டைப் போட்ட வனத்துறை  நிர்வாகத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) உடுமலையில் இருக்கும் மாவட்ட  வனத்துறை அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, உடுமலை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குமார்  தலைமையில் நடைபெற்ற பலசுற்றுப் பேச்சு வார்த்தையில் பாதை அமைக்க வனத்துறை ஒப்புக்கொண்டதையடுத்து, காத்திருப்பு போராட்டம் இரவு முடிவுக்கு வந்தது. உடுமலை வட்டத்திற்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் குருமலை, மாவடாப்பு, குழிப்பட்டி, மேல்குருமலை, பூச்சி கொட்டாம் பாறை, கருமுட்டி, காட்டுபட்டி, ஈசல்திட்டு, கோடந் தூர், ஆட்டுமலை, பொருப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மூங்கில் பள்ளம் ஆகிய செட்டில் மென்ட் பகுதிகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட  மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் குருமலை, குழிப்பட்டி, மாவடாப்பு, மேல்குருமலை பகுதிகளுக்கு செல்வதற்கு மக்கள் திருமூர்த்தி மலை அடிவாரப் பகுதியில்  இருந்து நடந்து செல்வார்கள். வாகனங்கள் மூலம் செல்ல வேண்டும் என்றால் வால்பாறை  செல்லும் வழியில் உள்ள காடம்பாறையில் இருந்து கரடு முரடான மலைப் பாதையில் இருந்து தான் வாகனங்களில் செல்ல முடியும்.

மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதி கள் தேவையை, 2006 வன உரிமை சட்டப்படி செய்துதர வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல போராட்டங்கள் நடை பெற்றன. கடந்த 2023ஆம் ஆண்டு மலை வாழ் மக்கள் குடியிருப்புக்குச் செல்ல பாதை அமைத்து தர வலியுறுத்தி சங்கத்தின் அப்போ தைய மாநிலத் தலைவர் பெ. சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அப்போதைய செயலாளர் செ. முத்துக் கண்ணன் ஆகியோர் தலைமையில் உடு மலை வனத்துறை அலுவலகத்தில் மலைவாழ்  மக்கள் மூன்று நாட்கள் காத்திருப்பு போராட் டம் நடத்தினர். உடுமலை நகர மக்களின் பேராதரவுடன் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் மூன்றாம் நாளில்- 2023 ஜூலை 12 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் திருமூர்த்தி மலை அடிவாரப் பகுதியில் இருந்து குறுமலை  வரை சாலை அமைக்கப்படும் என்ற வரலாற்று  சிறப்புமிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் தளி பேரூ ராட்சி நிர்வாகத்தின் சார்பில் குறுமலைக்கு சாலை அமைக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் தொடங்கியது. ஆனால், இந்தச் சாலை அமைந்தால் மலை அடிவாரப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலத்தை ஆக்கி ரமித்து விவசாயம் செய்து வரும் தனிநபர் களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த சமூக விரோதிகளுக்கு ஆதரவாக வனத்துறை அதிகாரிகள் சட்டத்தில் இல்லாத காரணங்களைக் காட்டி சாலை அமைக்கும் வேலையை தடுத்து நிறுத்தினர்.  ஓர் ஆண்டுக்கு மேலாகியும் எந்த முடிவும்  ஏற்படாத நிலையில் தான், மீண்டும் காத்தி ருப்புப் போராட்டத்தை மலைவாழ் மக்கள் நடத்தினர். இந்தப் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது.

போராட்டத்தையொட்டி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன:

1. திருமூர்த்திமலையில் இருந்து குறு மலை வரை ஏற்கெனவே மக்கள் நடந்து செல்லும் மரபு வழி பாதையில் சுமார் ஆறு மீட்டர்  அகலத்தில் தீ தடுப்பு கோடுகள் வெட்டி தரப்படும்

. 2. வனத்துறை அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்ட சாலைப் பணிகள் அடுத்த 15 நாட் களுக்குள் மீண்டும் தொடங்கப்படும்.

3. தளிஞ்சி செட்டில்மெண்ட் செல்லும் வழி யில் உள்ள கூட்டாறு ஆற்றின் குறுக்கே சேத மடைந்துள்ள தரைப்பாலம் புதுப்பிக்கப்படும்.

4. ஈசல்திட்டு செட்டில்மெண்ட் பகுதிக்கு புதிய  சாலை அமைக்க வனத்துறை ஒப்புதல் அளிக்கும். வருவாய் கோட்டாட்சியர் குமார் தலை மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கோ. செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பி னர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர். மதுசூதணன், டி. ஜெயபால் மற்றும்  மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மணிகண்டன், சுப்பிரமணியன், குப்புசாமி, செளந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்ட னர். அரசு தரப்பில் மாவட்ட வன அலுவலர் தேவேந்தரகுமார் மீனா, வன அலுவலர் மணி கண்டன், காவல்துறை துணை கண்காணிப்பா ளர் சுரேஷ்குமார் (பொறுப்பு), உடுமலை வட்டாட் சியர் கெளரிசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.