தமிழக ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு
நாகர்கோவில், மே 2- தமிழக ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மீனவ அமைப்புகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடல்வளத்தை அழிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்திட வேண்டும் என தமிழக முதல மைச்சருக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் எஸ்.அந்தோணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை மற்றும் கன்னியாகுமரி யில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஒன்றிய மோடி அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய எரிசக்தி இயக்குநரகம்(டிஜிஎச்) சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க திறந்தவெளி அனுமதி அடிப்ப டையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆவது சுற்று ஏலத்தை விட்டது. தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 பகுதிகள் உட்பட 28 வட்டாரங்களில் 1,36,596 சதுர கிலோ மீட்டர் அளவு ஏலம் விடப்பட்டது. இதில் தமிழக ஆழ்கடல் பகுதியில் கன்னியாகுமரியின் தென்முனையில் உள்ள ஆழ்கடலில் 3 இடங்களிலும் (27154.80 சதுர கி.மீ), சென்னைக்கு அருகே ஆழ்கடலில் ஒரு இடத்திலும் (5,330.49 சதுர கி.மீ) என மொத்தம் 32,485.29 சதுர கி.மீ பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்ப தற்கான அனுமதியை ஒன்றிய எரிசக்தி துறை வழங்கியுள்ளது. கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகளும், மீனவர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது கடும் கண்டனத்துக்குரி யது.
கேரளத்தில் நிறுத்தம்
கடந்த 2024 ஜனவரி 1 ஆம் தேதி இந்த இடங்களில் ஆய்வு மற்றும் கிணறுகள் அமைக்க சர்வதேச அள வில் அழைப்பாணை விடப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு தமிழக ஆழ்கடலில் எடுத்தால் மீன்வளம், கடல் வளம் சீரழிந்து போகும் என மீனவ அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சி கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரி வித்து போராடி வரும் நிலையில் கடந்த வாரம் தமிழகத்தில் 4 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க தில்லியில் ஓஎன்ஜிசி நிறுவ னத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கேரளத்தில் இத்திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் அமைப்பு போராட் டம் நடத்தியதால் நிறுத்தப்பட்டுள்ளது. அதைப்போல் தமிழகத்தில், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு (சிஐடியு), மீனவர் அமைப்புகள், கண்டன இயக்கங்கள் நடத்தி வருகின்றன. தமிழக முதல மைச்சர் இதனைக் கண்டு மீனவ அமைப்புகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவி லான போராட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், ஏற்கனவே கடலில் தனிமங்கள் எடுப்பதற்கான கடல் சுரங்கம் அமைக்க அனுமதி, காற்றாலை திட்டம், நீலக்கொடி பிரதேச திட்டம் என பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றிய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. மீனவர்களை பாதுகாப்பதற்கு பதி லாக அவர்களின் அன்றாட வாழ்க்கையை சீரழிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங் களில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) தொடர் போ ராட்டங்கள் நடத்தி வருகிறது. ஒன்றிய அரசு உடனடியாக ஆழ்கட லில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இது சம்பந்தமாக அனைத்து மீனவர் அமைப்புகளோடு ஆலோசித்து போராட்டங்கள் நடத்த திட்டமிடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.