வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஏப்.26- வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்.இ. ஆர்.ஏ) சார்பில் வாழ்வாதார கோரி;f கையினை நிறைவேற்றக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க வட்டாரத் தலைவர் பரஞ்சோதி, தமிழ்நாடு வரு வாய் கிராம ஊழியர் சங்க வட்டாரத் தலைவர் சுரேஷ், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டாரத் தலைவர் செல்வம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க வட்டாரத் தலைவர் நூர்ஜ கான், தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் சங்க ஒன்றிப்பு தலைவர் சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க தலைவர் ஜெயதுரை வரவேற்றார். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பணியை புறக் கணித்து வெளிநடப்பு செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப் பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிவளவன் தலைமை தாங்கி னார். இதில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதி யம் மற்றும் தனி ஊதியம் உடனடி யாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி னர். இதில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் ஒன்றிணைப்பு, தமிழ்நாடு வரு வாய் கிராம ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பாபநாசம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், அலுவலகத்தி லிருந்து ஒரு மணிநேரம் வெளி நடப்பு செய்து பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாப நாசம் வட்டத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். கூட்டமைப்பு நிர்வாகிகள் சிவப்பிரகாசம், ராஜேஷ், பாலாஜி, பாக்கியராஜ், கிருஷ்ணமூர்த்தி, பிராங்ளின் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.