அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் நேருவிடம் மனு
திருச்சிராப்பள்ளி, மே 7 - திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலை மையில், அனைத்து நிர்வாகிகள் அமைச்சர் கே.என். நேருவை புதனன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், “மே 9 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் அறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு விழா ஆகிய வற்றிற்கு எங்களது காந்தி மார்க்கெட் வியா பாரிகளின் கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அதே நாளில் (மே 9) பஞ்சப்பூர் பசுமை பூங்காவில், புதிதாக அமையவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் 25 வியாபார சங்கங்கள் ஒன்றிணைந்து உரு வாக்கியுள்ள எங்களது வியாபார கூட்டமைப்பின் நிர்வாகிகளை யும் கலந்தாலோசித்து, சுமார் 2,300 மொத்தம், சில்லரை வியா பாரிகளுக்கும், பொதுமக்களுக் கும் ஏற்றவாறு நல்ல விசாலமான வசதிகளுடன் கூடிய கடைகள் அமைத்து தருமாறு கேட்டுக் கொள் கிறோம்” என கூறப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் கே.என்.நேரு வியாபாரிகளிடம் கூறுகையில், “திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்ந்து இங்கேயே செயல்படும். பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட் கள்ளிக்குடி மார்க்கெட் போல் அமைந்து விடாது. மே 9 அன்று மார்க்கெட் டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய பிறகு உங்களை (வியா பாரிகள்) கலந்து ஆலோசித்த பிறகுதான் புதிய மார்க்கெட்டில் கடைகள் அமைக்கப் படும்” என்றார். அமைச்சர் கே.என்.நேருவின் இந்த அறிவிப்புக்கு, திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்ட மைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.