tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மகளைக் காணவில்லை: தந்தை புகார்

  தஞ்சாவூர், ஏப்.23 -  தஞ்சாவூர் மாவட்டம், வேங்கராயன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம் (65). இவரது மகள் ஜோதிமணி (25).  இவரது கணவர் மோகன் ராஜ் இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த ஏப்.19 அன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்து விட்டுச் சென்ற ஜோதிமணி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சாம்ப சிவம் மற்றும் குடும்பத்தி னர் ஜோதிமணியை பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து வல்லம் காவல்நிலையத்தில் சாம்ப சிவம் புகார் தெரிவித்தார். அதில் தஞ்சாவூர் அருகே 12-ம் பட்டு பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவ ரின் மகன் ராமமூர்த்தி (27) என்பவர் மீது சந்தேகம்  இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதன்பேரில் வல்லம் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

மின்சாரம் தாக்கி  வியாபாரி பலி

தஞ்சாவூர், ஏப்.23 -  தஞ்சாவூர் மாவட்டம்  செங்கிப்பட்டி மேலத்தெரு வைச் சேர்ந்தவர் சேக் மௌலானா (53). இவர்  அயோத்திப்பட்டி அம்பேத் கர் நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து, காய்கறி வியா பாரம் செய்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் அப்பகுதியில் உள்ள மினி  வாட்டர் டேங்கில் குளிப்ப தற்காக சேக் மௌலானா சென்றார். அப்போது வாட்டர் டேங்க் மின் மோட் டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் தண்ணீரை திறந்த சேக் மௌலானா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.  தகவலறிந்த செங்கிப் பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சேக் மெளலானா உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்  கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இதுகுறித்து  வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டு உள்ளனர்.

விஜயபாஸ்கர் மீதான வழக்கு: விசாரணை ஏப்.28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, ஏப்.23 - முன்னாள் அமைச்சர் சி.  விஜயபாஸ்கர் மீதான சொத் துக் குவிப்பு வழக்கு விசா ரணை ஏப்.28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பின ராக இருப்பவர் சி.விஜய பாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் வரு மானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடியில் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக் கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத் தில் புதன்கிழமை விசார ணைக்கு வந்தது. விஜய பாஸ்கர் ஆஜராகவில்லை; அவர் தரப்பில் வழக்குரை ஞர்கள் ஆஜராயினர்.  வழக்கு விசாரணையை ஏப்.28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி வி.வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டார்.

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புக! இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஏப்.23-  புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி யில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் அரசு மன்னர் கல்லூரி கிளையின் 4 ஆவது மாநாடு கிளைத் தலைவர் ராணி பிரியா தலை மையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  மாவட்ட துணைத் தலைவர் ஆ.பாலாஜி தொடக்கவுரையாற்றினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்து கிளைச் செயலா ளர் தனுஷ் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாவட்டச் செயலாளர் இரா.வசந்தகுமார் நிறைவுரையாற்றினார். கிளைத் தலைவராக காவியன், செயலாளராக சஞ்சய் பாரதி, துணைத் தலைவர்களாக துருதேஷ், அனிதா, துணைச் செயலாளர்களாக பிரிய தர்ஷினி, கருணா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி யில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப  வேண்டும். 2025-2026 கல்வியாண்டு முதல்  பிஏ பொலிட்டிக்கல் சைன்ஸ், பிஏ பப்ளிக் அட்மினிஸ்ரேட்டிவ், பிஏ டிபென்ஸ் ஸ்டடி, பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேசன், பிஎஸ்சி  ஜியாக்ரபி உள்ளிட்ட பாடப் பிரிவுகளை உரு வாக்க வேண்டும். கல்வி உதவித்தொ கையை குறித்த காலத்தில் வழங்க வேண்டும்.  கல்லூரி உணவகத்தை விரிவுபடுத்திட வேண்டும். அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, ஏப்.23 - வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசா ரணை மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டிய லின மக்கள் வசிக்கும் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப் பட்ட சம்பவத்தில், விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீ சார், அதே  கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த மார்ச் 12 அன்று குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்கள் மூன்று பேருக்கும் குற்றப் பத்திரிகையின் நகல்  வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசா ரணை புதன்கிழமை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட மூவ ரும் ஆஜராயினர். வழக்கு விசாரணையை மே 12 ஆம்  தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ஜி. அற்புத வாணன் உத்தரவிட்டார்.