சென்னை, ஆக.16- சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டையில் நடந்த விழா வில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீர மணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பழைய பட்டினத்தில் 2.12.1933 அன்று ஆசிரியர் கீ.வீரமணி பிறந்தார். போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு 40 முறை சிறைக்கு சென்ற வர். விடுதலை நாளிதழ் ஆசிரியராக 60 ஆண்டுகள் சிறப்பாக செயல்படுபவர். பெரியாரின் பணியை தொடர்ந்து செய்து, தமிழினத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்பதால் அவ ருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதர விருதுகள் அரசு பள்ளி மாணவர்களுக் கான, காலை உணவு திட்டத்தை நிர்வகிப்பதற்கும், கண்காணிப்ப தற்கும், ‘மொபைல் ஆப்’ உருவாக்கி, உணவு தயாரிப்பு மற்றும் விநியோ கத்தை, மின்னணு தகவல் பலகை வழியே கண்காணித்து மேம்படுத்து வதை பாராட்டி, இந்த விருது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, இணை தலைமை நிர்வாக அதிகாரி ரமண சரஸ்வதி பெற்றார்.
ஆதரவற்ற நோயாளிகளுக்கு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில், சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன், கோவை மாவட்டத்தில், அரசு பள்ளி குழந்தை களுக்கு, பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்திய, கோவை புறநகர் காவல்துறை கண் காணிப்பாளர் (எஸ்.பி) பத்ரிநாரா யணன் ஆகியோருக்கும், முதல்வரின் நல் ஆளுமை விருதுகள் கொடுக்கப் பட்டன. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு, தமிழ் நாடு அரசின் துணிவு மற்றும் சாகச செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்பட்டது. விருதுடன், ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. வேலூர் தொழில்நுட்ப பல்கலை யில், கணினித் துறையில் பேராசிரிய ராக பணிபுரியும் வசந்தா கந்தசாமிக்கு, அப்துல் கலாம் விருதை முதல்வர் வழங்கினார்.