சென்னை, ஜன. 13 - பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு நடத்தி விவாதிக்க வேண்டும் என்று அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு அனைத்து இடங்களிலும் பாதுகாப் பான சூழலை உருவாக்க வேண்டும், பணியிடங்களில், கல்வி நிலையங்க ளில் பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறை விசாரணைகளை நேர்மையாகவும், விரைவாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை கை விட்டு, நீதி கிடைக்க சமூகம் துணை நிற்க வேண்டும், ஊடகங்கள் கற்பனை செய்திகளை விடுத்து அறத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக் கிழமையன்று (ஜன.11) சைதாப் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 26 அமைப்புகளை உள்ளடக்கிய அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் கே.பால பாரதி கூறியதாவது: இந்தியாவில் பெண்கள், குழந்தை கள் மீதான வன்முறை தொடர்பாக ஓராண்டில் 36 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. இதில், எத்தனை வழக்குகளில் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை தெரிவிப்பதில்லை. குறிப் பாக, உத்திர பிரதேசம் குற்றப்பிரேச மாக மாறிக்கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாலி யல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வயது வித்தியாச மின்றி பாலியல் வன்முறைக்கு உள்ளா கின்றனர். கள்ளக்குறிச்சி பள்ளிக்கு எதிரே கழிவறையில் கால் தடுக்கி விழுந்து சிறுமி இறந்ததாக கூறப்படு வதில் சந்தேகம் உள்ளது. கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத் தல், கொலை செய்வது தொடர்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தண்டனையை அதிகரித்து சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. தமிழ கத்தில் பாலியல் குற்றங்கள் அதி கரிக்க காரணம் என்ன? இத்தகைய குற்றங்களுக்கு சமூக நிகழ்வு களும் காரணமாக உள்ளன. அதிகாரத்தி லிருப்பவர்களும், சாதாரனமானவரும் குற்றவாளிகளாக உள்ளன ர். கல்வி வளாகங்கள், கிராமங்களில்கூட போதைப்பொட்கள் தங்கு தடையின்றி புழங்குகிறது. பெண்க ளின் கல்வி, சுதந்திரம் பாதுகாக்க வேண்டு மென்று பெண்கள் கூட்ட மைப்பு போராடுகிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திமுக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 26 அமைப்புகளை உள்ளடக்கிய அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட் டத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு (சிஐடியு) ஒருங்கி ணைப்பாளர் டி.சாந்தி தலைமை தாங்கி னார். பல்வேறு அமைப்புகளின் தலை வர்கள் உரையாற்றினர்.
விளையாட்டு வீராங்கனைகள் பாதிக்கப்பட்டபோது எங்கே போனீர்கள்?
பெண்கள், குழந்தைகளை நுகர்வு பொருளாக சித்தரிக்கும் நவ தாராயமயக் கொள்கை தீவிரமடைந்துள்ளது. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தும் செயல் பின்தங்கியுள்ளது. எனவே, பாலியல் குற்றங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வு நடத்தி விவாதிக்க வேண்டும். அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தை கண்டித்து பாஜக மகளிர் அணி கால் சிலம்போடு போராடுகிறது. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராடுகின்றன. தமிழகத்தின் மதச்சார்பற்ற அரசியலை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சியாக அந்த போராட்டங்கள் உள்ளன. டெல்லியில் விளையாட்டு வீராங்கனைகள் போராடியபோது பாஜக மகளிர் அணி தலைவி குஷ்பு ஏன் கால்சிலம்பை ஏந்தவில்லை? அதிமுக கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்?