tamilnadu

மின் ஊழியர் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: ஜன.6 இல் மீண்டும் பேச்சு

சென்னை, ஜன. 3 - மின்வாரிய தொழிற்சங்கங்க ளுடன் செவ்வாயன்று (ஜன.3) நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் புதிய ஊதிய விகி தத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கடந்தும் இதற்கான பேச்சுவார்த்தையை நிர்வாகம் தொடங்காமல் உள்ளது.  எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த் தையை உடனடியாக தொடங்க வேண்டும், 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பணி களில் அயல்பணி (அவுட்சோர்சிங்) முறையை கைவிட வேண்டும், வாரிய சுற்றறிக்கை பிபி-2ஐ ரத்து  செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு ஒரே மாதிரி பணப்பலன்களை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.10 அன்று வேலை  நிறுத்தம் நடைபெறும் என்று மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனையொட்டி சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள தொழி லாளர் நல இணை ஆணையர் ரமேஷ்குமார் தலைமையில் நடை பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த் தையில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகம் சார்பில் முடிவெடுக் கும் நிலையில் உள்ள உயர் அலு வலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது.  இதனையடுத்து வெளியே வந்த தலைவர்கள், திட்ட மிட்டபடி ஜன.10 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முழக்க மிட்டனர். இதற்கிடையே ஜன.6 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தொழிலாளர் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.