tamilnadu

img

சந்தை பொருளாதாரத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்படுகின்றன

சென்னை, மே 21- சந்தை பொருளாதாரத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்படுகின்றன என சிஐடியு மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.  ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழ்நாட்டின் 7 முனை களில் இருந்து நடைபயண பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை மண்டல பயணக் குழு சார்பில் சென்னை திரு வொற்றியூரில் நடைபயண பிரச்சார  துவக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை (மே 20) நடைபெற்றது.   சிஐடியு வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் பேசுகையில், நாடு இதுவரை சந்திக்காத புதிய சவால் களை சந்தித்திக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சந்தை பொருளா தாரம். குடி தண்ணீர், மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் சந்தைதான் முடிவு செய்யும். அதனால் தான் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   தொழிலாளர்களுக்கு மட்டு மல்லாமல் கருத்தாலும், கரத்தாலும் பணிபுரியக்கூடிய அனைவருமே ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். மருத்துவமனையில் பணிபுரிய கூடிய மருத்துவர்கள், பத்திரிகை துறையில் பணிபுரியும் நிருபர்கள் என அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப் பட்டு விட்டனர் என்றார். ஒப்பந்த தொழிலாளர்களை பொறுத்தவரை சில இடங்களில் ஊதியம் கூடுதலாக இருக்கும், சில இடங்களில் மிகக் குறைவாக இருக்கும். இதுதான் சந்தை பொருளாதாரத்தின் நடவடிக்கை. அதனால்தான் குறைந்த பட்ச கூலி 26 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்துகிறது.

 அனைத்தையும் சந்தைதான் முடிவெடுக்கும் என்றால், நான் வாக்க ளித்த அரசின் பணி என்ன என்ற கேள்வி எழலாம். அரசு சந்தைக்கு உதவி செய்யும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  சந்தை என்றால் சிறு வணி கர்கள், சிறு, குறுந்தொழில் செய்ப வர்கள் அல்ல. டாடாவும், பிர்லாவும், அம்பானியும், அதானியும்தான் சந்தை. ஏனென்றால் காய்கறி, மருந்து, மளிகைப் பொருட்கள் என அனைத்தை யும் அவர்கள் துவக்கி விட்டனர். அப்பா, அம்மாவை தவிர மற்ற அனைத் தையும் வியாபாரம் செய்வதுதான் சந்தை பொருளாதாரத்தின் உச்சகட்டம் என்றார்.  அதற்கேற்றார்போல் சட்டங் களை உருவாக்கும் அரசு, பழைய நியதிகளை மதிக்காது. பழைய நியா யங்களை ஏற்காது. காவல்துறை, ராணு வம் சந்தைக்கு ஏற்ப மாற்றப்படு கிறது. அதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏனென்றால் சந்தை கொடூரமானது. அது தன்னு டைய லாபத்தை மட்டும்தான் கணக்கில் கொள்ளுமே தவிர மனிதர்களின் துன் பங்களைப் பற்றி, வேலையில்லா திண்டாட்டம் குறித்து கவலைப்படாது. 

1919இல் ஐஎல்ஓ என்ற சர்வதேச அமைப்பு உருவாகும் போது அதில் ஆரம்ப உறுப்பினர் இந்தியா. அதில்  நிறைவேற்றப்பட்ட 8 மணி நேர வேலை என்பது இன்று மீறப்படு கிறது. 240 நாட்கள் வேலை செய்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது  480 நாட்களாக மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் அமலாவதில்லை. ஏனென் றால் சந்தை அதை ஏற்கவில்லை. நிரந்தர தன்மை தேவையில்லை என்று  சந்தை கூறுகிறது.  இப்படி மாறிவரும் சூழ்நிலை யில்தான் சிஐடியு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் இந்த பிரச்சார நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் ஆதர வளிக்க வேண்டும் என்று டி.கே.ரங்க ராஜன் கேட்டுக் கொண்டார்.  வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ் ணன், நடைபயணக் குழுவின் தலைவர் எம்.தனலட்சுமி ஆகியோரும் பேசினர்.  முன்னதாக வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கே.ஆர்.முத்துசாமி வரவேற்றார். துணைச்செயலாளர் வி.ஜெயகோபால் நன்றி கூறினார். இதில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தலைவர் எம்.சந்திரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், பொரு ளாளர் வி.குப்புசாமி, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பகத்சிங் தாஸ், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொருளா ளர் பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.