tamilnadu

img

ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் தீபாவளி முடித்து அலை மோதிய கூட்டம்

நாகர்கோவில், நவ.3-  தீபாவளிப் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில், வெளியூரில் இருந்து  வந்தவர்கள் திரும்பிச் செல்வதற்கு ரயில் நிலையம், பேருந்து நிலையத் தில் குவிந்ததால் பயணிகள் கூட்டம் அலை மோதியது. தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப் பட்டது. அதில், தீபாவளிக்கு முதல் நாளே மக்கள் சொந்த ஊருக்கு வரத்துவங்கினர். அதன் பிறகு, தொடர்  விடுமுறை என்பதால், அவர்கள் சொந்த  ஊரில் தங்கியும், சுற்றுலாக்கள் சென்றும் வந்தனர். இதில், சென்னை,  கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், மதுரை போன்ற பிற மாவட்டங்க ளில் படிக்கும் மாணவ, மாணவிகள், குடும்பத்தினருடன் தங்கி அரசு மற்றும்  தனியார் நிறுவனங்களில் வேலை  பார்ப்பவர்கள் தங்கள் குடும்பத்தினரு டன் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் வந்து சேர்ந்தனர். இவர்களில் பலர் ரயிலில் முன்பதிவு  செய்தும், பலர் அரசு, தனியார் பேருந்து களில் முன்பதிவு செய்தும் பாதுகாப் பாக வந்து சேர்ந்தனர். பெரும்பா லானோர் டிக்கட் கிடைக்காமல் தற்கா லிக டிக்கட்டில் காத்து கிடந்து பல்வேறு  சோதனைகளை கடந்து வந்து சேர்ந்த னர். முன்பதிவு ஏற்கனவே முடிந்த நிலை யில் ரயில் மற்றும் பேருந்துகளில் தற்காலிக டிக்கட்டில் பயணம் செய்ய முன்னதாகவே அங்கு சென்று குவிந்த னர். இளம் பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு குடும்பத்தினர் அங்கு  குவிந்தனர். அங்கு வரும் பேருந்து களில், ரயில்களில் இடம் பிடிக்க முண்டியடித்துக்கொண்டு ஓடினர்.

நாகர்கோவிலில் இருந்து ரயில்கள்  குறிப்பிட்ட அளவே உள்ள நிலை யில், அந்த ரயில்கள் சென்ற பின்னர் அங்கிருந்து கிளம்பி தனியார் ஆம்னி  பேருந்து நிலையம் மற்றும் அரசு  பேருந்து நிலையத்திற்கு படையெடுத்த னர். அங்கு வரும் பேருந்துகளில் ஏறி பயணிக்க அங்கும் இங்கும் சுற்றி திரிந்த னர். நாகர்கோவில் வடசேரி பேருந்து  நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்கள்,  தமிழக அண்டை மாநிலங்களான கேரளா, பெங்களூர் போன்ற மாநிலங்க ளுக்கும் பேரூந்துகள் இயக்கப்படு கின்றன. இவைகளும் முன்பதிவு முடிந்த நிலையில், தாங்கள் செல்வ தற்கு வேறு வழி தெரியாமல் திணறிய படி பயணிகள் நின்றனர். இது குறித்து அரசு போக்கு வரத்துக் கழகம் மற்றும் அரசு விரை வுப் போக்குவரத்து கழக அதிகாரிகள்  கூறுகையில், பயணிகளின் கூட்டத் திற்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்பட் டுள்ளது. பயணிகள் வர வர பேருந்து கள் இங்கிருந்து பயணிகளை ஏற்றிக்  கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது என்றனர். அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், மதுரை, சென்னை, திருப்பூர், ஈரோடு,  கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்க ளுக்கு பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகமாக இயக்கப் பட உள்ளன என்றனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், மதுரை, திருச்சி, சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு,  பெங்களூர் போன்ற நகரங்களுக்கு கூடு தல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த வாறு பேரூந்துகள் எண்ணிக்கை உயர்த்தப்படும். அதற்காக முழு முயற்சியில் உள்ளோம் என்று தெரிவித் தனர்.