நிலத்திற்கான விலை ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் என்றால் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 20 பைசா மட்டுமே. இது மின் உற்பத்தியில் நிலத்திற்கான செலவு மட்டுமே. ஒரு ஏக்கரில் உள்ள பழுப்பு நிலக்கரி படிமம் சுமார் 50,000 டன் = 5,00,00,000 கிலோ. ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு சுமார் 900 கிராமிலிருந்து 1.10 கிலோ கிராம் பழுப்பு நிலக்கரி தேவை நிலத்தின் விலை ஒரு ஏக்கர் ரூபாய் 1,00,00,000 ( 1 கோடி) ஒரு யூனிட்டிற்கு 1,00,00,000% 5,00,00,000 =Rs.0.2. புதிய மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான தற்போதைய விலை சுமார் ஐந்து ரூபாய் ஆகும். மொத்த மின்சார உற்பத்தி செலவில் நிலத்திற்கான செலவு 4% மட்டுமே.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) உருவாக காரணமா யிருந்த சுமார் 45 கிராமங்களைச் சேர்ந்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு என்எல்சி நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத் திற்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவோம் என்ற வாக்குறுதியும் முழுமையாக நிறை வேற்றப்படவில்லை சுமார் 1000 குடும்பத்திற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு மற்றவர்களை ஏமாற்றிவிட்டது. வேலை வேண்டாம் என்று சொல்லக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. இன்னும் முழுமையாக வழங்கப்பட வில்லை. இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக நிலம் எடுத்த வர்களுக்கு ஒரு பகுதி பணத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதி கொடுபடாமல் உள்ளது. இவர்களுக்கு ‘புதிய நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வில் நியாயமான மற்றும் வெளிப்படையான, இழப்பீட்டு உரிமை சட்டம் 2013’கொள்கையின் அடிப்படையில் நிலத்திற்கான விலையும் வழங்கிட வேண்டும். மேலும், என்எல்சி நிறுவனம் ‘மக்கள் நீதிமன்றம்’ என்ற பெயரில் லோக் அதாலத் நீதிமன்றத்தில் 400விவசாயிகளிடம் ஏமாற்றி ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று உள்ளதும் நடந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று மனைக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு கூட விஜயமாநகரம், நெய்வேலி இந்திரா நகர் உள்ளிட்ட மாற்று குடியிருப்பு கிராமங்களுக்கு பட்டா வழங்கப்படாத நிலை இருக்கிறது. பட்டா கேட்டு தொடர்ந்து மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். சந்தை மதிப்பில் 4 மடங்கு அதிகம் தருக! இந்த நிலையில் தான் மூன்றாவது சுரங்கத்திற்கு சேத்தியாத்தோப்பைச் சுற்றியுள்ள 26 கிராம மக்கள் 1A வடலூர், வானதி ராயபுரம், தென்குத்து மக்கள், ஒரு அடி மண்ணையும் தரமாட்டோம் என குரல் எழுப்பி வருகிறார்கள். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. புதிதாக நிலம் கையகப்படுத்தும் போது இன்றைய சந்தை மதிப்பில் 4 மடங்கு அல்லது ஒரு கோடி இதில் எது அதிகமோ அதனை வழங்கிட வேண்டும். பழுப்பு நிலக்கரி படுகை நிலங்களில் ஒரு ஏக்கரில் சுமார் 50,000 டன் முதல் 55,000 டன் வரை பழுப்பு நிலக்கரி உள்ளது. ஆகவே மின் உற்பத்தி செலவில் நிலத்திற்கான செலவு என்பது சுமார் 1% மட்டுமே. என்எல்சி நிர்வாகம் அறிவித்த கொள்கை அறிவிப்பில் இனி நிரந்தர வேலை வாய்ப்பு இல்லை; ஒப்பந்தம், மற்றும் அவுட்சோர்சிங்கில் தான் வேலை வாய்ப்பு என அறிவிப்பு செய்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிரந்தர வேலைவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். மாற்று குடியமர்வுக்கு 5 சென்ட் மனைப் பட்டாவுடன் 1000 சதுர அடியில் வீடு மற்றும் ஆடு, மாடு கொட்டகை கட்டி வழங்கிட வேண்டும். நிலம் எடுக்கும் பகுதியிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சொந்த வீடு, நிலம் இல்லாத; அந்த பகுதிகளுக்கு உட்பட்ட அதனைச் சார்ந்து வாழும் அனைத்து மக்களுக்கும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வில் நியாயமான மற்றும் வெளிப்படை யான, இழப்பீட்டு உரிமை சட்டம்-2013-ன் அடிப்படையில் உரிய இழப்பீடு உரிய வேலை வாய்ப்பும் வழங்கிட வேண்டும்.
கடல்நீர் உட்புகும் அபாயம்
கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை என்எல்சி நிறுவனம் முழுமையாக உறிஞ்சி தண்ணீரை வெளி யேற்றுவதால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரில் சவுடு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்எல்சி-யின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியை இரண்டு சதம் என்பதை லாபத்தில் 10 சதமாக உயர்த்திட வேண்டும். இதை கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்திட வேண்டும்; ஏரி, குளம், வாய்க்கால் தூர்வார முழுமையாக ஒதுக்கீடு செய்திட வேண்டும். என்எல்சி பொதுத்துறை நிறுவனம் ஆகும். எனவே அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் கொள்கையை உருவாக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜுன் 4 (இன்று) கம்மாபுரத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் இந்த பகுதி வாழ் அனைத்து மக்களின் உரிமை காக்க அணிதிரள்வோம்.