திருவாரூர், நவ.19 - குடிநீருக்கும், விளைநிலங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நில ஒருங்கி ணைப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர்கள் கே.ஆர். ஜோசப், எம்.சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலை வர்கள் எஸ்.தம்புசாமி, கே.முருகை யன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உரையாற்றுகையில், “எதிர்கால வளர்ச்சிக்கும், பொதுப் பயன்பாட்டிற் குமான நிலம் எடுப்பதற்கு பல சட்டங்கள் இருந்தும், அவைகளை புறந் தள்ளி நில ஒருங்கிணைப்புச் சட்டம் - 2023ஐ தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை கணக்கில் கொள்ளாமல், நீர்நிலைகள் இருந்தாலும் 247 ஏக்கருக்கு மேல் தேவைப்படும் பெரும் கம்பெனிகளுக்கு தங்குதடையின்றி உடனடியாக நிலங்களை வழங்க வகை செய்கிறது இந்தச் சட்டம். இது விவசாயிகள் உணவு உற்பத்தி, எதிர்கால நீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை பேரிடர் ஆகிய வற்றுக்கு வழிகோலும் என்பதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் போ ராட்டங்கள் நடத்தப்படுகிறது. இதைக் கண்டித்து, சென்னையில் நடந்த போராட்டத்தின் போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வரிடம் கொடுத்தும் இந்தச் சட்டத்தை அமல் படுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனே இச்சட்டத்தை திரும்ப பெற்ற வேண்டும். தற்போது இந்தச் சட்டத்தை திரும்ப பெறுவதுதான் ஒரே வழியாக உள்ளது” என்றார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மற்றும் சிபிஎம்-சிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இரு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.