tamilnadu

img

2021-இல் 6 ஆயிரத்து 161 நிறுவனங்கள் உருவாக்கம்

ஹவானா, டிச.23- புதிய கொள்கைகளை உருவாக்கி, சிறிய மற்றும் குறு நிறுவனங்களில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கியூபா செய்த பணிகளால் 2021-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 ஆயிரத்து 161 நிறு வனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஓராண்டில் பெரும் கவனம் எடுத்த தால் இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்த  நிறுவனங்கள் மூலமாக குறுகிய காலத்திலேயே 1 லட்சத்து 4 ஆயிரத்து 721 வேலைகள் உரு வாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்ட நிறு வனங்களில் 6 ஆயிரத்து 26 நிறுவனங்கள் தனியார் துறையிலும், 75 நிறுவனங்கள் அர சுத்துறையிலும் இயங்குகின்றன. இதில் 52 விழுக்காடு நிறுவனங்கள் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்து, மாற்றப்பட்டவையாகும். புதிய நிறுவனங்கள் 48 விழுக்காடாகும். புதிய வேலைகளை உருவாக்கும் நோக்கத்துடன்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. இதற்காக அரசின் கொள்கைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1 லட்சத்து 4 ஆயிரத்து 721 வேலைகள் என்பது வைக்கப்பட்ட இலக்கை விட அதிகமானதாகும். டிசம்பர் 22- ஆம் தேதியன்று ஒரே நாளில் 174 புதிய சிறு,  குறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங் களைத் தொடங்குவதற்கு ஒப்புதல் தரப்பட்டது.  இவற்றில் பல நிறுவனங்கள் கியூபாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்காவில் அமைக்கப்படுகின்றன.

கியூபா அரசாங்கம் ஒரு விஷயத்தில் கவன மாக இருக்கிறது. கேந்திரத் துறைகளான சுகாதாரம், தொலைத் தொடர்பு, எரிபொருள், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறைகளில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்தான் இயங்குகின்றன. இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதில் தனியார் முதலீட்டை கியூபா வரவேற்கவில்லை. இந்தத் துறைகள் அரசின் வசம் இருப்பதுதான் சரி என்ற நோக்கில் செயல்படுகிறார்கள். தனியார் துறை முதலீடுகளைப் பொறுத்தவரையில், வீட்டுவசதி, அழகு நிலையங்கள், உள்ளூர் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம். தற்போது உருவாக்கப்பட்டுள்ள கொள்கையின்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அரசுத்துறையாகவோ அல்லது தனியார் துறையாகவோ அல்லது இரண்டு துறைகளும் கூட்டாகவோ இயங்கலாம். அவரவர் தனித்தன்மையோடு சட்டப்படி இந்த நிறுவனங்களால் இயங்க முடியும். அரசுத்துறை நிறுவனங்கள், விவசாயத்துறை அல்லாத கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பைத் தரும் நிறு வனங்கள் என்று கியூபாவின் பொருளாதாரத் துறையில் மாற்றங்கள் உருவாகியுள்ளன.

தடைகளை மீறி முன்னேறும் மருத்துவம்

கியூபாவின் மருத்துவத்துறை தடை களை மீறி சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடு களில் கியூப மருத்துவர்கள் மற்றும் ஊழி யர்கள் முகாமடித்துள்ளனர். லட்சக்கணக்கான சிகிச்சைகளை செய்து முடித்துள்ள இவர்கள், தங்கள் பணியை ஒரு சமூகக் கடமையாக நினைத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் தடைகள் இந்த செயல்பாடு களைத் தடுக்க முடியவில்லை. ஆனால், அத்தடைகள் அமெரிக்கர்களின் உயிர்கள் பறிபோவதை தடுப்பதற்கு எதிராக உள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு மேல் நீரிழிவு நோயால் இறந்து  போகிறார்கள். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலான உயிர்களைப் பாதுகாக்க முடியும்.  இதற்கான சிகிச்சையில் கியூபா பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால், அத்தகைய சிகிச்சையை அமெரிக்கர்கள் பெற  அந்நாடு விதித்துள்ள தடைகள் முட்டுக்கட்டை யாக இருக்கின்றன. மனித உயிர்களைப் பாது காப்பதில் அக்கறை செலுத்தாமல், சோசலிச கியூபாவை முடக்குவதில்தான் அமெரிக்க அரசு கவனமாக இருக்கிறது.