tamilnadu

img

வேளாண் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் பெருங்குடியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

வேளாண் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் பெருங்குடியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

ஒன்றிய அரசு, ஜிஎஸ்டி, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாறாக, பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகை, ஊக்கத்தொகை, மானியம் கடன் தள்ளுபடி வழங்குகிறது. விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. கனிம  வளங்களை தனியாருக்கு தாரை வார்க்க  ஆட்சியாளர்கள் சட்டத்திருத்தம் செய்கின்ற னர். ஒன்றிய, மாநில அரசுகளே கனிமத் தொழிலை நடத்தினால் வேலைவாய்ப்பும், அரசுக்கு வருவாயும் பெருகும். மதுரை மேலூர் பகுதியில் கிரானைட் கொள்ளை தொடர்பாக அரசு அமைத்த சகாயம் குழு அறிக்கை மீது அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். சகாயத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். தாதுமணல் கொள்ளை தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அர சுக்கு 1800 கோடி ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திறமைவாய்ந்த வழக்கறி ஞர்களை வைத்து அரசு வழக்கை நடத்த வேண்டும். திமுக கொடுத்த வாக்குறுதிகளில் எஞ்சியவற்றை நிறைவேற்றினால், 2026 சட்டமன்ற தேர்தலை வலுவுடன் சந்திக்க முடியும். ‘கள்’ உணவுப் பொருள் அல்ல. அது ஒரு வகை மதுதான். டாஸ்மாக் மூலம் மது பானங்கள் விற்கும்போது, கள் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பினால் புரிந்து கொள்ள முடியும். கள்ளை உணவு வகையில் சேர்த்து விற்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. குடிப்பழக்கத்தால் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற் கின்றன. இத்தகைய சூழலில் மதுபானத் தோடு கள்ளையும் குடிக்கலாம் என்பது சீர்திருத்தமோ, முற்போக்கோ கிடையாது. சென்னை பெருங்குடியில் நடைபெற்ற  மக்கள் சந்திப்பு இயக்கத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதிலிருந்து...