வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி குளித்தலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழு சார்பில், காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி. ஜீவானந்தம், பி. ராஜூ ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் பி. சங்கர நாராயணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.