tamilnadu

img

அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி கண்டரமாணிக்கத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, டிச.3- சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகா கண்டரமாணிக்கம் ஊராட்சி யில் ஊராட்சி நிர்வாகம்,  ஒன்றிய ஊரா ட்சி நிர்வாகம், மின்வாரிய நிர்வாகம்   அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கண்டமாணிக்கம் கிளையின் சார்  பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பாலு தலைமை வகித்  தார். கிளைச்செயலாளர்  அழகப்பன்,   ஊராட்சி வார்டு உறுப்பினர் -பெண்கள் கிளைச் செயலாளர் லட்சுமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயற் குழு உறுப்பினர் மோகன், தாலுகாச்  செயலாளர் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் ,பால் உற்பத்தி யாளர் சங்க மாவட்ட செயலாளர் வேணு கோபால்  ஆகியோர் பேசினர்.