tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேட்டூர் அணை திறப்புக்கு முன் பாலம் கட்டும் பணியை  தொடங்க சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், மே 21 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்தில் உள்ள  சீதக்கமங்கலம் ஊராட்சி மேலராமன் சேத்தி பெரியவாய்க்கா லில் சிறிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கியும் அதற்கான பணி  கிடப்பில் உள்ளது. ஜூன் 12 அன்று மேட்டூர் அணையைத் திறப்பதற்கு முன்பாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. குடவாசல் ஒன்றியம், மேலராமன் சேத்தி பெரிய வாய்க்கா லில் சிறிய பாலம் அமைக்க கோரி  ரூ.28.74 லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2024-2025 திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்தும், இன்னும்  பணி துவங்காமல் உள்ளது.  இப்பாலம் அமைக்கப்பட்டால், விவசாயப் பணிகளுக்கு விவசாயிகள் இடுபொருள் எடுத்துச் செல்ல சிரமமின்றி இருக்கும். மேலும் இந்த வழியாகத்தான் இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும். பாலம்  இல்லாததால் வாய்க்கால் இறங்கி நடக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஜூன் 12-இல் மேட்டூர் அணையில் நீர் திறக்க இருப்பதால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக பாலம்  கட்டும் பணியை தொடங்க வேண்டும் என சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கோபிநாத் சம்பந்தப்பட்ட துறை யினருக்கும், அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலவச கண் சிகிச்சை முகாம்

பாபநாசம், மே 21 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் முன்னிலை யில், கண் மருத்துவ அறிவியல் வல்லுநர் ரெங்கநாயகி கண் புரை முற்றிய நிலையில் இருந்த 14 பேரை, கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கண்ணில் லென்ஸ் பொருத்தி பார்வை பெற, தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி  மையத்திற்கு அனுப்பி வைத்தார்.  திருவையாறு, திருவாலம் பொழில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் முன்னிலையில், கண் மருத்துவ அறிவியல் வல்லுநர் ரெங்கராஜ் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 19 பேரை தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார்.

நாட்டு வெடி மூலப்பொருட்கள்  பறிமுதல்: ஒருவர் கைது  

தஞ்சாவூர், மே 21 - தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி தென்பாதி கிராமத்தில் கடந்த மே 18 அன்று நாட்டு வெடி தயாரிப்பின் போது ஏற்பட்ட  விபத்தில், முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், தஞ்சா வூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாட்டு வெடி தயா ரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், அனைத்து வட்டாட்சியர்கள் தலைமையில் கண்கா ணிப்புக் குழு அமைக்கப்பட்டு பல இடங்களில் ரகசிய தகவல்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, திருவோணம் வட்டாட்சியர் சுந்தமூர்த்தி தலைமை யிலான குழுவினர், நெய்வேலி தென்பாதி, வடபாதி, திரு வோணம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளை கடந்த இரண்டு நாட்களாக கண்காணித்தனர். இதில், நெய்வேலி வடபாதி, நடுத்தெருவைச் சேர்ந்த சின்னதம்பி மனைவி சந்திரா என்பவருக்கு சொந்தமான தேக்கு மரத்தோப்பில், நாட்டுவெடி பொருட்கள் இருப்பதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வாட்டாத் திக்கோட்டை காவல்துறையினர் உதவியுடன், தேக்கு மரத்தோப்பில் இருந்த ஊதா நிற பிளாஸ்டிக் பேரல் ஒன்றை  பறிமுதல் செய்தனர். இதில் நாட்டு வெடி கட்டுவதற்கான வெடி  மருந்துகள், மூலப்பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், வெடி பொருட் களை பதுக்கி வைத்திருந்த நெய்வேலி வடபாதி, நடுத்தெரு வைச் சேர்ந்த முனியய்யா (62) என்பவரை புதன்கிழமை கைது  செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அனுமதியின்றி அபாயகரமான நாட்டுவெடி பொருட்களை பதுக்கி வைப்பது மற்றும் தயாரிக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆண்டிமடத்தில் ஜமாபந்தி: 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு அரியலூர், மே 21 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்திற்கான 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி திங்களன்று துவங்கியது. ஆண்டிமடம் உள் வட்டத்தில் உள்ள  ஓலையூர், ஆத்துகுறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச் சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை, வரதராஜன் பேட்டை, பெரிய கிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், அணிக்குதிச் சான் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி உடையார்பா ளையம் ஆர்டிஓ ஷீஜா தலைமையில் நடைபெற்றது. ஆண்டி மடம் தாசில்தார் ராஜமூர்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளர் அரசு கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.  பொதுமக்கள் 204 பேர் மனுக்கள் அளித்திருந்தனர். இவற்றில் 24 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப் பட்டது. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 174 மனுக்கள் விசாரணையில் உள்ளன.

ரயிலில் கடத்தி வரப்பட்ட  50 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

தஞ்சாவூர், மே 21 - தஞ்சை வழியாக செல்லும் ரயில்களில் புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறதா என்று இருப்புப்பாதை காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன், ராமநாதன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், தலைமை காவலர்கள் பிச்சைவேல், பாரதி, அபிராமி மற்றும் காவலர்கள் செவ்வாயன்று மாலை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பனாரஸ் - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சையில் ஓரிரு நிமிடங்கள் நின்றது. அந்த ரயிலில், இன்ஜின் அருகே உள்ள முன்பதிவு இல்லாத பெட்டி மற்றும் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இரண்டு குழுக்களாக சென்று காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகளிலும் இருக்கையின் அடியில் தனியாக மூட்டைகள் இருந்தன. மொத்தம் இருந்த மூன்று மூட்டைகளையும் சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் அவிழ்த்துப் பார்த்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பண்டல் பண்டல்களாக இருந்ததை பார்த்தனர். மொத்தம் 50 கிலோ அளவுக்கு இருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றி விசாரித்தனர். ஆனால் புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர் யார் என்று தெரியவில்லை.  இதையடுத்து 50 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து உணவு பொருள் பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்தனர். ஓடும் ரயிலில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊழியர் விரோதப் போக்குடன் செயல்படும்  வட்டார மருத்துவ அலுவலர் மீது  நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

கரூர், மே 21 - கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அரசு  ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ  அலுவலர்  மோகனவள்ளி ஊழியர் விரோதப் போக்கை கைவிடக் கோரியும், ஊழி யர் விரோதப் போக்கினை கையாண்டு வரும் மருத்துவ அலுவலர் மீது துறை ரீதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு  சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து  கோரிக்கை மனு வழங்கினர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழ கன், மாவட்டச் செயலாளர் பொன் ஜெய ராம், மாவட்ட தணிக்கையாளர் செல்ல முத்து, மாவட்ட துணைத் தலைவர் கண்ணன்,  மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணி, மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலாளர் இளங்கோ, மாவட்டச் செயலாளர் பிரேம் குமார் மற்றும் வட்டக் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கரூர் நகராட்சி மாநகராட்சியாகவும், பள்ளப்பட்டி, புகளூர் போன்ற பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், பல்வேறு ஊராட்சி கள் பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப் பட்டன. பல ஆண்டுகள் கடந்த பிறகும், தரம்  உயர்த்தப்பட்டதற்கான வீட்டு வாடகை படி,  நகர ஈட்டு படி ஆகியவை இதுவரை அனு மதிக்கப்படாததை சுட்டிக்காட்டி, உடனடி யாக உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப் படி ஆகியவை ஊழியர்களுக்கு கிடைக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை மேற் கொண்டு  நடவடிக்கை எடுப்பதாக கூறி னார். மேலும், உடனே நிதித்துறை செயலாள ருக்கு கடித வரைவு மற்றும் முன்மொழிவு கள் அனுப்பி, விரைவில் உயர்த்தப்பட்ட வீட்டு வாடகை படி மற்றும் நகர ஈட்டுப்படி பெறுவதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததாக சங்கத் தின் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.