tamilnadu

img

மதுரையில் சிபிஎம் பிரச்சார நடைபயணம் நிறைவு

மதுரையில் சிபிஎம் பிரச்சார நடைபயணம் நிறைவு

ஒன்றிய பாஜக அரசின் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராகவும்.  சிறு - குறுந்தொழில்கள், நடுத்தர  தொழில்களை  பாதுகாத்திடவும், தொழில்களை பாதித்திடும் அநியாய ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்தும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற  அரசியல் சட்ட மாண்புகளை சிதைப்பதற்கு எதிராகவும், மதவெறியை தூண்டி - சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதை  கண்டித்தும், மதுரையில் கனரக தொழிற்சாலை நெய்பர் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கிட வேண்டும். பெரிய அளவிலான சிட்காட் -மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் துவக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மாநகரில் ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு நடைபயணம் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சுமார் 20 குழுக்கள் மதுரை நகர் முழுவதும் உள்ள தெருக்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து கோரிக்கைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஜூன் 21 இறுதி நாள் பிரச்சார பயணத்தை மத்திய -1ஆம் பகுதி குழுவில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார்.  மகபூப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் சின்னபாண்டி தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் எம்.சி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரச்சார பயணம் பகுதிச் செயலாளர் ஏ.பாண்டி தலைமையில் ஜின்னா திடலில் துவங்கி, எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோவில் அருகில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பிரச்சார நிறைவு கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் மா.கணேசன் கலந்து கொண்டு பேசினார்.