புதுதில்லி மே 5- வடமேற்கு தில்லியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. பாஜக ஆளும் மாநகராட்சியின் புல்டோ சர்களால் நொறுக்கப்பட்ட தள்ளு வண்டி களுக்கு பதிலாக புதிய தள்ளுவண்டி களை சிபிஎம் தில்லி மாநகர கமிட்டி வழங்கியுள்ளது. ஜஹாங்கீர்புரியில் தள்ளுவண்டி வியாபாரத்தை நம்பியிருக்கும் ஏழை மக்களுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வண்டி களை திங்களன்று (மே 2) ஒப்படைத் தார். முன்னதாக, சிபிஎம் மாநிலக் குழு தலைமையில் நடந்த கணக்கெடுப்பில் 98 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. முதல் கட்டமாக அவர்களுக்கு உணவுப் பெட்டிகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 20 பேருக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. மேலும் 30 பேரிடம் அடுத்துவரும் நாட்களில் தள்ளு வண்டிகள் ஒப்படைக்கப்படும். வீடுகள் மட்டுமின்றி, சிறுபான்மை யினர் பகுதியில் உள்ள பல தள்ளு வண்டி கள் மற்றும் கடைகளை பாஜகவினர் புல்டோசர் மூலம் தகர்த்தனர். வாழ்வா தாரத்தை இழந்து பல குடும்பங்கள் ரம்ஜான் காலத்தில் பட்டினியால் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கடன் வாங்கி, கடை வைத்து குடும்பம் நடத்தியவர்களின் வாழ்க்கையை புல்டோசர்கள் உடைத்து நொறுக்கின. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறி ஞர்கள் சங்கத்துடன் இணைந்து உச்ச நீதிமன்றம் உட்பட சட்ட உதவிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்து வருகிறது. நிகழ்ச்சியில் தில்லி மாநில செயலாளர் கே.எம்.திவாரி, புஷ்பிந்தர் கிரேவால், ஆஷா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.