tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு ரூ.4.65 லட்சம் நிதி வழங்கியது

சிபிஎம் அகில இந்திய மாநாடு  சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு ரூ.4.65 லட்சம் நிதி வழங்கியது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு  மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டு நிதியாக கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் வழங்கப்பட்டது.           அகில இந்திய மாநாட்டு நிதி அளிப்பு சிறப்பு பேரவை மார்ச் 2 ஞாயி றன்று தூத்துக்குடி மாசிலாமணி புரத்தில் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகத்தில்  நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநாட்டு நிதி 4 லட்சத்து 65 ஆயிரம்  ரூபாயை அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும் மத்தியக்குழு உறுப்பின ருமான கே.பாலகிருஷ்ணனிடம் இடைக்கமிட்டி செயலாளர்கள் வழங்கினர். இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் பி.பூ மயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், கு.ரவீந்திரன், ஆர்.பேச்சி முத்து, எஸ் அப்பாதுரை, தா.ராஜா, த.சண்முகராஜ், கே.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் தேசாபிமானி இடைக்கமிட்டி மாநாடு

திருவனந்தபுரம், மார்ச் 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழான தேசாபிமானியின் திருவனந்தபுரம் பதிப்பு இடைக் குழு மாநாடு தோழர் கோடி யேரி பாலகிருஷ் ணன்  நினைவரங் கில் நடைபெற்றது. கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினரும் தேசாபிமானி ஆசிரியருமான புத்தலத்து தினேஸன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினரும் பதிப்பா சிரியருமான எம்.ஸ்வராஜ் வாழ்த்துரை நிகழ்த்தினார். 13 பேர் கொண்ட புதிய இடைக்குழு தேர்வு செய்யப்பட்டது. செயலாளராக பி.அனில்குமார் தேர்வு செய்யப் பட்டார்.

சிபிஎம் அகில இந்திய மாநாட்டிற்கு உப்பிலியாபுரம் ஒன்றியக்குழு ரூ.2 லட்சம் வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட உப்பிலியபுரம் ஒன்றியக்குழு சார்பில் சனிக்கிழமை அன்று கோரிக்கை விளக்க மற்றும் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் உப்பிலியாப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரா.முத்துகுமார் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் டி. முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து அகில இந்திய மாநாட்டிற்கு நிதியாக ரூ.2 லட்சத்தை, புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் உப்பிலிபுரம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும். அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் போது மான மருத்துவர்கள், செவிலியர்களை நிய மித்து நவீன மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும். 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளும் சட்டப்படி அமல்படுத்த வேண்டும். ஜவ்வரிசி தொழிற்சாலை உரு வாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மூத்த தோழர் அன்பழகன் நிறைவுரையாற்றினார்.